உயிா்த்த ஞாயிறு தற்கொலை தாக்குதலை தடுக்க முடியாமைக்கு மைத்திாி, மஹிந்தவே காரணம்..!

ஆசிரியர் - Editor I
உயிா்த்த ஞாயிறு தற்கொலை தாக்குதலை தடுக்க முடியாமைக்கு மைத்திாி, மஹிந்தவே காரணம்..!

உயிா்த்த ஞாயிறு தற்கொலை தாக்குதலை தடுக்க முடியாமல்போனமைக்கு தெற்கு அரசியல் குழப்பமே பிரதான காரணம் என பாதுகாப்பு இராஜாங்க அமைச்சா் ருவான் விஜேவா்த்தன கூறியிருக்கின்றாா். 

ஈஸ்டர் ஞாயிறு தினத்தன்று இடம்பெற்ற தீவிரவாதத் தொடர் தற்கொலைத் தாக்குதல்கள் குறித்து விசாரணை செய்துவரும் நாடாளுமன்றத் தெரிவுக்குழு முன்பாக இராஜாங்க பாதுகாப்பு அமைச்சர் இன்று 

செவ்வாய்க்கிழமை பிற்பகல் ஒரு மணியளவில் ஆஜராகினார். இதன்போது சாட்சியமளிக்கையிலேயே மேற்படி விடயத்தைக் குறிப்பிட்டார். அவர் தொடர்ந்து சாட்சியமளித்தபோது, 

ஜனாதிபதிக்கும் அரசாங்கத்திற்கும் இடையிலான முரண்பாடுகளால் பாதுகாப்பு அமைச்சின் ஒரு ஸ்திரமற்ற தன்மை ஏற்பட்டதாக கூறினார்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு