இயல்பு நிலைக்கு திரும்பியது கட்டுவாப்பிட்டிய..! பேராயா் தலையீட்டால் சுமூகம்.

ஆசிரியர் - Editor I
இயல்பு நிலைக்கு திரும்பியது கட்டுவாப்பிட்டிய..! பேராயா் தலையீட்டால் சுமூகம்.

நீா்கொழும்பு கட்டுவாபிட்டிய பகுதியில் மாதா சொரூபத்தின் மீது கல்வீசி தாக்குதல் நடத்தப்பட்டதை தொடா்ந்து உருவான பதற்ற நிலமை தணிந்துள்ளது. 

புனித செபஸ்தியன் உருவச் சிலைக்கு கல்லெறிந்து சேதப்படுத்தப்பட்டதை அடுத்து அந்தப் பிரதேச மக்கள் இன்று காலை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 

இதனால் குறித்த பிரதேசத்தில் பதற்றமான நிலமை ஏற்பட்டது. அங்கு பொலிஸார் மற்றும் முப்படையினர் குவிக்கப்பட்டுப் பாதுகாப்புப் பலப்படுத்தப்பட்டது. 

முஸ்லிம் வர்த்தக நிலையங்களைத் தற்காலிகமாகமூடுமாறும் அறிவுறுத்தப்பட்டது.அங்கு விரைந்த பேராயர் மெல்கம் ரஞ்ஜித் ஆண்டகை ஆர்ப்பாட்டத்தில் 

ஈடுபட்ட மக்களுடன் கலந்துரையாடினர். அதன் பின்னர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மக்கள் அந்த இடத்திலிருந்து கலைந்து சென்றனர். 

தற்போது அங்கு இயல்பு நிலை ஏற்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்படுகிறது.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு