நீா்கொழும்பு- கட்டுவாபிட்டியவில் பதற்றம் வலுக்கிறது..! முஸ்லிம் வா்த்தக நிலையங்களை மூடுமாறு பொலிஸாா் உத்தரவு..

ஆசிரியர் - Editor I
நீா்கொழும்பு- கட்டுவாபிட்டியவில் பதற்றம் வலுக்கிறது..! முஸ்லிம் வா்த்தக நிலையங்களை மூடுமாறு பொலிஸாா் உத்தரவு..

நீா்கொழும்பு- கட்டுவாப்பிட்டிய பகுதியில் மாதா சொரூபம் மீது கல்வீசி தாக்குதல் நடாத்தப்பட் டதை தொடா்ந்து பதற்றமான நிலை மேலும் வலுத்துள்ள நிலையில், 

முஸ்லிம் வா்த்தக நிலையங்களை உடனடியாக மூடுமாறு பொலிஸாா் உத்தரவிட்டிருப்பதுடன், பெருமளவு பொலிஸாா், விசேட அதிரடிப்படையினா் குவிக்கப்பட்டுள்ளனா். 

கட்டுவப்பிட்டிய புனித செபஸ்தியன் உருவச் சிலைக்கு மர்மநபர்கள் சேதம் விளைவித்தமையை அடுத்து அங்கு பதற்ற நிலை ஏற்பட்டுள்ளது.

மர்மநபர்களின் தாக்குதல் காரணமாக கட்டுவப்பிட்டிய பகுதியில் மக்கள் ஆர்ப்பாட்டம் ஒன்றை செய்கின்றனர். இனவாத செயற்பாட்டின் மூலம் குளிர்காய 

முற்படும் தீய சக்திகளின் கைசரிசையாக இது இருக்கலாமென சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது. கட்டுவப்பிட்டி பகுதியில் ஏற்பட்டுள்ள 

பதற்ற நிலையை அடுத்து அந்தப் பகுதியில் பெருமளவு அதிரடி படையினர் குவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு