கொழும்பிலிருந்து விசேட அறிவித்தல்..! யாழ்.நகருக்குள் பல இடங்களில் திடீா் சோதனை, அடையாள அட்டைகளும் பாிசோதிக்கப்படுகிறது..

ஆசிரியர் - Editor I
கொழும்பிலிருந்து விசேட அறிவித்தல்..! யாழ்.நகருக்குள் பல இடங்களில் திடீா் சோதனை, அடையாள அட்டைகளும் பாிசோதிக்கப்படுகிறது..

நல்லூர் கந்த சுவாமி ஆலய வருடாந்தத் திருவிழாவை காரணம் காட்டி யாழ்ப்பாணத்தில் பல இடங்களில் இராணுவச் சோதனைச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.

சந்தேகத்துக்கு இடமான வாகனங்கள் மறிக்கப்பட்டு சோதனையிடப்படுவதுடன் சில இடங்களில் அடையாள அட்டையும் பதிவு செய்யப்படுகின்றன.

வரலாற்றுச் சிறப்புமிக்க நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்த திருவிழா நாளை செவ்வாய்க்கிழமை கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி 27 நாள்கள் திருவிழா நடைபெறவுள்ளது.

இதனை முன்னிட்டு நல்லூர் ஆலய சூழலில் பொலிஸாரின் பாதுகாப்பு நடவடிக்கைக்கு மேலதிகமாக இராணுவத்தினரும் தேடுதல் நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளனர்.

இந்த நிலையில் யாழ்ப்பாணம் மாநகர எல்லையில் கொழும்புத்துறை பிரதான வீதி, ஸ்ரான்லி வீதி உள்ளிட்ட பல இடங்களில் வீதித் தடை போடப்பட்டு 

சந்தேகத்துக்கு இடமான வாகனங்கள் மறிக்கப்பட்டு சோதனையிடப்படுகின்றன. கொழும்புத் துறைப் பகுதியில் சோதனையிடப்படுவோரின் 

அடையாள அட்டையும் பதிவு செய்யப்படுவதாக பொது மக்கள் தெரிவித்தனர். இதேவேளை, கொழும்பிலிருந்து வழங்கப்பட்ட அறிவுறுத்தலையடுத்தே 

இராணுவ சோதனைகள் அதிகரிக்கப்பட்டுள்ளதாக விடயமறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன.


பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு