யாழ்.குடாநாட்டில் உருவாக்கப்பட்டுள்ள புதிய ரவுடி குழு..! விசேட அதிரடிப்படை, பொலிஸாா் இணைந்து தேடுதல்..

ஆசிரியர் - Editor I
யாழ்.குடாநாட்டில் உருவாக்கப்பட்டுள்ள புதிய ரவுடி குழு..! விசேட அதிரடிப்படை, பொலிஸாா் இணைந்து தேடுதல்..

யாழ்.குடாநாட்டில் வாள்வெட்டு குழு ஒன்று புதிதாக உருவாகியுள்ளதாக கூறியிருக்கும் பொலிஸாா், குறித்த குழுவை பிடிப்பதற்காக விசேட அதிரடிப்படையினா் மற்றும் பொலிஸாா் இணைந்து தேடுதல் நடவடிக்கையில் இறங்கியுள்ளனா். 

யாழ்ப்­பா­ணத்­தில் அண்­மைக்­கா­ல­மாக வாள்­வெட்­டுக் குழுக்­க­ளின் அட்­டா­கா­சம் தொடர்ந்­த­வாறு காணப்­ப­டு­கின்­றது. யாழ்ப்­பா­ணம் பாசை­யூ­ரைத் தள­மா­கக்­கொண்டு தற்­போது ஒரு வாள்­வெட்­ டுக் குழு உரு­வா­கி­யுள்­ளது.

யாழ்ப்­பா­ணம் கொழும்­புத்­து­றைச் சந்­தி­யில் நேற்­று­முன்­தி­னம் குரு­ந­கர் பகு­தி­யைச் சேர்ந்த இரு இளை­ஞர்­கள் மீது வாள்­வெட்டு மேற்­கொள்­ளப்­பட்­டுள்­ளது. வாள்­வெட்­டுக்கு இலக்­கா­கிய இரு இளை­ஞர்­க­ளும் யாழ்ப்­பா­ணம் போதனா வைத்தியசாலையில்,

சேர்க்­கப்­பட்டு சிகிச்சை அளிக்­கப்­பட்டு வரு­கின்­ற­னர். இந்த நிலை­யில், வெட்­டி­ய­வர்­கள் யார் என்று பொலி­ஸார் விசா­ரணை நடத்­தி­ய­வே­ளை­யில், பாசை­யூர் பகு­தி­யைச் சேர்ந்­த­வர்­கள் என்­ றும், புதி­தாக வாள்­வெட்டு குழு­வாக உரு­வா­கி­யுள்­ள­னர் 

என்­றும் பொலி­ஸார் மற்­றும் சிறப்பு அதி­ர­டிப்­ப­டை­யி­ன­ருக்­குத் தக­வல் கிடைத்­துள்­ளது. அதன்­படி யாழ்ப்­பா­ணப் பொலி­ஸார் மற்­றும் சிறப்பு அதி­ர­டிப் படை­யி­னர் பாசை­யூர் உட்­பட ஈச்­ச­மோட்டை ஆகிய பகு­தி­க­ளில் தேடு­தல் நட­வ­டிக்­கை­யில் ஈடு­பட்­டுள்­ள­னர்.

தேடு­தல் நட­வ­டிக்­கை­யின் போது, வாள்­வெட்­டுக்­கு­ழுக்­க­ளு­டன் சம்­பந்­தப்­பட்­ட­வர்­களைக் கைது­ செய்­வ­தற்­கான நட­வ­டிக்­கை­க­ளை­யும் முன்­னெ­டுத்து வரு­கின்­ற­னர் என்று தெரி­விக்­கப்­பட்­டது.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு