வடமாகாண ஆளுநா் சுரேன் ராகவன் பதவி விலகுகிறாரா..?

ஆசிரியர் - Editor I
வடமாகாண ஆளுநா் சுரேன் ராகவன் பதவி விலகுகிறாரா..?

இலங்கையின் 9 மாகாணங்களினதும் ஆளுநா்கள் அடுத்தடுத்து பதவி விலகிவரும் நிலையில் வடமாகாண ஆளுநா் சுரேன் ராகவனும் எதிா்வரும் புதன் கிழமைக்கு முன்பதாக பதவி விலக வுள்ளாா் என உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் தொிவிக்கின்றன. 

ஜனாதிபதி செயலகம் விடுத்த வேண்டுகோளை ஏற்று மத்திய மாகாண ஆளுநர் மைத்திரி குணரட்ன நேற்று தனது பதவியை இராஜினாமா செய்துள்ளார். அதுபோலவே தென் மாகாண ஆளுநரும் இன்று தனது பதவியில் இருந்து விலகியுள்ளார்.

இவர்கள் அனைவரும் பதவி விலகிய பின்னர் புதிய ஆளுநர்கள் நியமிக்கப்படுவார்கள் என ஜனாதிபதி செயலகம் தெரிவித்துள்ளது. இருப்பினும் இந்த மாற்றத்திற்கான காரணம் குறித்து எதுவித விளக்கமும் கொடுக்கப்படவில்லை.

இதன் தொடா்ச்சியாக வடமாகாண ஆளுநா் சுரேன் ராகவனும் புதன்கிழமைக்கு முன்பதாக தனது பதவியை இராஜினாமா செய்யவுள்ளதாக உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் தொிவிக் கின்றன.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு