ஆனைக்கோட்டை- வட்டுக்கோட்டை இடையில் வழிப்பறி கொள்ளையா்கள் அட்டகாசம் அதிகாிப்பு..! பொலிஸாா் அசமந்தம்.

ஆசிரியர் - Editor I
ஆனைக்கோட்டை- வட்டுக்கோட்டை இடையில் வழிப்பறி கொள்ளையா்கள் அட்டகாசம் அதிகாிப்பு..! பொலிஸாா் அசமந்தம்.

யாழ்.வழுக்கையாறு பகுதியில் வழிப்பறி கொள்ளை சம்பவங்கள் அதிகாித்துள்ளதால் அந்த பதியூடாக பயணிப்பதற்கு மக்கள் அச்சம் தொிவிக்கின்றனா். 

கொள்­ளை­யர்­கள் வீதி­யால் செல்­ப­வர்­களை வழி­ம­றித்து, நிறுத்தி பணம், நகை­க­ளைப் பறிக்க முற்­ப­டு­கின்­ற­னர். நேற்­று­முன்­தி­னம் காலை தனி­மை­யில் வந்த பெண்­ணொ­ரு­வ­ரின் 

தங்­கச் சங்­கிலி, தாலிக்­கொடி என்­பன அறுத்­துச் செல்­லப்­பட்­டுள்­ளன. யாழ்ப்­பா­ணம், ஆனைக்­ கோட்­டைச் சந்­தி­யில் இருந்து வட்­டுக்­கோட்­டைச் சந்­தி­வரை செல்­லும் வீதி­யில் 

உள்ள வழுக்­கை­யாற்­றுப் பகு­தி­யில் இவ்வாறு தொடர்ச்­சி­யாக வழிப்­ப­றிக்­கொள்­ளை­கள் இடம்­ பெ­று­கின்­றன என்று சுட்­டிக்­காட்­டப்­பட்­டுள்­ளது.

இது தொடர்­பில் பாதிக்­கப்­பட்­ட­வர்­கள் மானிப்­ பாய் காவல் நிலை­யத்­தில் முறைப்­பா­டு­க­ளைப் பதிவு செய்­த­போ­தும், இழந்த நகை­க­ளையோ, பணத்­தையோ? 

காவல்துறையினர் மீட்­டுக்­கொ­டுக்­க­வில்லை என்று குற்­றஞ்­சாட்­டப்­ப­டு­கி­றது. அத்­து­டன் குறித்த வீதி­யில் கொள்­ளை­யர்­கள் உலா­வு­கின்­ற­னர். 

மக்­கள் அந்த வீதி­யால் செல்­வ­தற்கு அஞ்­சு­கின்­ற­னர் என்று தெரி­விக்­கப்­ப­டும்­போது, அந்த வீதி­ யில் கண்­கா­ணிப்பு நட­வ­டிக்­கை­க­ளி­லோ, 

அல்­லது மக்­க­ளுக்­கான பாது­காப்­பி­லோ காவல்துறையினர் ஈடுபடுவதில்லை என மக்கள் குற்றம் சாட்டுக்கின்றார்கள்.கொள்ளையர்கள் நேற்­று­முன்­தி­னம் 

வட்டுக்­கோட்­டைப் பகு­தி­யில் இருந்து யாழ்ப்­பா­ணம் நோக்கி உந்­துரு­ளி­யில் பய­ணித்த பெண்ணை துரத்­திச் சென்று அவர் அணிந்­தி­ருந்த தாலிக்­கொடி மற்­றும் சங்­கி­லியை 

அறுத்­துள்­ள­னர். இத­னால் அந்­தப் பெண்­ணின் கழுத்­துப் பகுதி காயங்­க­ளுக்கு உள்­ளா­னது என்று சம்­ப­வத்தை நேரில் கண்­ட­வர்­கள் தெரி­வித்­த­னர்.

வழிப்­ப­றிக்­கொள்­ளை­யில் ஈடு­ப­டு­ப­வர்­கள் மேலங்கி, கையுறை, முகத்தை மூடிய தலைக்­க­வ­சம் என்­பவற்றை அணிந்­தி­ருந்­தி­ருந்­த­னர். அந்த வீதி­யால் அங்­கும் இங்­கும் செல்­கின்­ற­னர். 

தனி­மை­யில், உத­வி­யின்றி வரு­ப­வர்­களை அவ­தா­னித்து அவர்­கள் தங்­க­ளு­டைய கைவ­ரி­சைக் காட்ட முற்­ப­டு­கின்­ற­னர். 

இத­னால் நவாலி வீதி­யால் பய­ணிப்­ப­தற்கு அச்­சம் ஏற்­ப­டு­கி­றது. நவாலி வீதி­யில் இடம்­பெ­றும் இந்­தச் சம்­ப­வங்­க­ளைத் தடுத்து நிறுத்த நட­வ­டிக்கை 

எடுக்­காதுவிடின் காலப்­போக்­கில் உயி­ரா­பத்­துக்­க­ளும் ஏற்­ப­டக்­கூ­டும் – என்று மக்­கள் அச்சம் கொண்டுள்ளனர்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு