மதுபோதையில் மோட்டாா் சைக்கிளால் மோதி சிறுமியை கொலை செய்த காவாலி..! நஞ்சருந்தி தற்கொலை முயற்சி..

ஆசிரியர் - Editor I
மதுபோதையில் மோட்டாா் சைக்கிளால் மோதி சிறுமியை கொலை செய்த காவாலி..! நஞ்சருந்தி தற்கொலை முயற்சி..

முல்லைத்தீவு- முள்ளியவளைப் பகுதியில் நடந்து சென்ற 7 வயதுச் சிறுமியை மதுபோதையில் சாரதி அனுமதிப்பத்திரமும் இன்றிப் பயணித்த ஒருவர் மோதித் தள்ளியதில் சிறுமி பரிதாபகரமாக உயிரிழந்தார்.

குறித்த சம்பவத்தில் பிரதீபன் - றிசாயினி என்னும் தண்ணிமுறிப்பு அ.த.ப.பாடசாலையில் தரம் 02இல் கல்வி கற்கும் 7வயதுச் சிறுமியே பரிதாபகரமாக உயிரிழந்தவராவார்.

குறித்த சம்பவத்தின்போது காலை 9.30 மணியளவில் குறித்த சிறுமி மச்சாளுடன் வீதியோரம் நடந்து சென்றுள்ளார். இதன்போது தலைக் கவசம் இன்றி வேகமாக பயணித்த ஒருவர் வீதியோரமாக பயணித்த சிறுமியை 

மோதித் தள்ளிய நிலையில் சிறுமி வீழ்ந்து மயக்கமடைந்துள்ளார். இதனால் விபத்திற்கு உள்ளான சிறுமியை உடனடியாக மாஞ்சோலை வைத்தியசாலையில் அனுமதித்து மேலதிக சிகிச்சைக்காக பகல் 1 மணியளவில் 

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி குறித்த சிறுமி நேற்று முனதினம் இரவு பரிதாபகரமாக உயரிழந்தார்.

இவ்வாறு உயிரிழந்த சிறுமியின் மரண விசாரணையை நேற்றைய தினம் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை திடீர் மரண விசாரணை அதிகார நமசிவாயம் பிறேம்குமார் மேற்கொண்டார்.

இதேநேரம் குறித்த விபத்தினை ஏற்படுத்தியவரும் சிறுமியின் நிலமையை அறிந்த நிலையில் தவறான முடிவெடுத்து தற்கொலைக்காக நஞ்சருந்திய நிலையில் மாஞ்சோலை வைத்தியசாலையில அனுமதிக்கப்பட்டுள்ளார்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு