அதிகாலையில் இலங்கையை உலுக்கிய கோர விபத்து..! 6 போ் பலி. 52 போ் படுகாயம்..

ஆசிரியர் - Editor I
அதிகாலையில் இலங்கையை உலுக்கிய கோர விபத்து..! 6 போ் பலி. 52 போ் படுகாயம்..

களுத்துறை வடக்கு வஸ்கடுவ பகுதியில் இன்று அதிகாலை இடம்பெற்ற கோர விபத்தில் 6 போ் சம்பவ இடத்திலேயே உயிாிழந்துள்ளதுடன், 52 போ் படுகாயமடைந்த நிலையில் களுத்துறை- நா கொட மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனா். 

தனியார் மற்றும் அரச பேருந்துகள் இன்று அதிகாலை நேருக்குநேர் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. இலங்கை போக்குவரத்துச் சபை பேருந்து, மற்றுமொரு வாகனத்தை முந்திச் செல்ல முற்பட்டபோது, எதிர்த்திசையில் பயணித்த தனியார் பேருந்துடன் 

மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றதாக காவல்துறை பேச்சாளர் ருவான் குணசேகர தெரிவித்துள்ளார். பலியானவர்களில் 3 பெண்களும், 3 ஆண்களும் அடங்குகின்றனர். இதேவேளை, 

காயமடைந்த 52 பேருள், 43 ஆண்கள், 8 பெண்கள், ஒரு குழந்தையும் அடங்குவதாக காவல்துறை பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார்.


பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு