ஈ.பி.ஆர்.எல்.எப் கூட்டணியில் இருந்து வெளியேறி மொட்டில் இணைந்த ஈரோஸ்!

ஆசிரியர் - Admin
ஈ.பி.ஆர்.எல்.எப் கூட்டணியில் இருந்து வெளியேறி மொட்டில் இணைந்த ஈரோஸ்!

ஈரோஸ் கட்சி, ஈ.பி.ஆர்.எல்.எப் கூட்டணியில் இருந்து வெளியேறி, மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கூட்டணியுடன் இணைந்துள்ளது. கடந்த உள்ளூராட்சி தேர்தலில், தமிழர் விடுதலைக் கூட்டனியின் சின்னத்தில் ஈ.பி.ஆர்.எல்.எப், துஸ்யந்தன் தலைமையிலான ஈரோஸ் ஆகிய கட்சிகள் இணைந்து போட்டியிட்டன.

ஈ.பி.ஆர்.எல்.எப் கட்சிக்காக ஈரோஸ் அமைப்பினரும் வன்னியில் கடும் பிரசாரங்களில் ஈடுபட்டிருந்தனர். வவுனியா மாவட்டத்தில், தமிழர் விடுதலைக் கூட்டணி சின்னத்தில் போட்டியிட்ட ஈ.பி.ஆர்.எல்.எப் ஒரு நேரடி ஆசனம் உட்பட 11 ஆசனங்களை பெற்றிருந்தது. 

அதில் ஈ.பி.ஆர்.எல்.எப் தனக்கு கிடைத்த ஆசனங்களில் வவுனியா வடக்கில் தமிழ்செல்வன், வவுனியா தெற்கு தமிழ் பிரதேச சபையில் சசிதரன் ஆகியோரை ஈரோஸ் சார்பில் உறுப்பினர்களாக நியமித்தது.

கடந்த உள்ளூராட்சி மன்ற தேர்தல் தொடக்கம் ஈ.பி.ஆர்.எல்.எப் கட்சியுடன் இணந்து செயற்பட்ட ஈரோஸ், தற்போது மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவுடன் கூட்டணி அமைத்துள்ளது.

வடமாகாண முன்னாள் முதலமைச்சரின் கூட்டணியில் இணைவது குறித்தும் ஈரோஸ் பிரதிநிதிகள் முன்னர் கலந்துரையாடியிருந்தனர்.

ஈரோஸ் அமைப்பு பொதுஜன பெரமுனவுடன் இணைந்தமையால், தமிழர் விடுதலைக் கூட்டணியின் ஊடாக உள்ளூராட்சி மன்றங்களில் பிரதிநிதித்துவத்தை பெற்றவர்களின் பெயர்களை, கூட்டணியின் செயலாளர் நாயகம் வீ ஆனந்தசங்கரி நீக்கிகொள்வார் என எதிர்பார்க்கப்படுகின்றது.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு