வீடு புகுந்து துப்பாக்கி சூடு..! கொழும்பில் பதற்றம்..

ஆசிரியர் - Editor I
வீடு புகுந்து துப்பாக்கி சூடு..! கொழும்பில் பதற்றம்..

கொழும்பில் வீடொன்றுக்குள் புகுந்து துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ள நிலையில் வீட்டில் இருந்த நபா் ஒருவா் படுகாயமடைந்துள்ளாா். 

மருதானை பிரதேசத்திலுள்ள வீடு ஒன்றின் மீது நேற்றிரவு துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

பண கொடுக்கல் வாங்கல் முரண்பாடு காரணமாக ஏற்பட்ட வாய்த்தகராறு நீண்ட தூரம் சென்றமையினால் துப்பாக்கி பிரயோகம் 

மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். வீட்டிற்கு வந்த நபரினால் இந்த துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. 

இந்த சம்பவத்தில் காயமடைந்த நபர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்ட சந்தேக நபர் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில், அவர் தப்பிச் சென்றுள்ளார்.

குறித்த நபரை கைது செய்வதற்கு விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு