புத்தளம், மன்னாா், காங்கேசன்துறை, முல்லைத்தீவு மாவட்ட மீனவா்களுக்கு எச்சாிக்கை..!

ஆசிரியர் - Editor I
புத்தளம், மன்னாா், காங்கேசன்துறை, முல்லைத்தீவு மாவட்ட மீனவா்களுக்கு எச்சாிக்கை..!

புத்தளம், மன்னாா் மற்றும் காங்கேசன்துறை, முல்லைத்தீவு மாவட்டங்களின் கடற்பகுதியில் காற்றின் வேகம் அதிகளவில் காணப்படும் என எச்சாித்துள்ள வளிமண்டலவியல் திணைக்களம் மீனவா்கள் அவதானமாக செயற்படுமாறு அறிவுறுத்தியுள்ளது. 

அத்தோடு, ஹம்பாந்தோட்டை தொடக்கம் பொத்துவில் கடற்கரைகளிலும் காற்றின் வேகம் அதிகரித்து காணப்படுமெனவும் குறித்த கடற்கரை பிரதேசங்களில் காற்றின் வேகம் மணிக்கு 60 கிலோமீற்றர் வரையில் அதிகரிக்கலாம் எனவும் அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இதன் காரணமாக கடலுக்கு செல்லும் மீனவர்கள் அவதானமாக செயற்படுமாறும் வலிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது. மேலும், கிழக்கு, ஊவா மற்றும் மத்திய மாகாணங்களிலும், பொலனறுவை மாவட்டத்தின் 

சில இடங்களிலும் இன்று மாலை இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் எனவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு