வவுனியா மாவட்ட செயலகத்திற்குள் திடீா் சோதனை..!

ஆசிரியர் - Editor I
வவுனியா மாவட்ட செயலகத்திற்குள் திடீா் சோதனை..!

வவுனியா மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டம் இன்று நடைபெற்ற நிலையில் என்றுமில்லாத வாறு கூட்டம் நடைபெறும் மண்டபத்தில் விசேட அதிரடிப்படையினா் தீவிர சோதனை நடவடிக் கையில் ஈடுபட்டிருக்கின்றனா். 

மாவட்ட அபிவிருத்திகுழு கூட்டம் இன்றைய தினம் மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் இடம்பெறவுள்ள நிலையில் இந்த சோதனை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. இதுவரைகாலமும் அபிவிருத்தி குழு கூட்டத்திற்கு முன்பாக 

இவ்வாறான சோதனை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படாத நிலையில், அரச உத்தியோகத்தர்கள் பங்கேற்கும் கூட்டத்திற்கு முன்பாக இவ்வாறு சோதனை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளமை விசனத்தினை ஏற்படுத்தியுள்ளது.

இதேவேளை, குறித்த கூட்டத்தில் அமைச்சர் ரிசாட் பதியுர்தீனும் கலந்துகொள்ளவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு