தமிழீழ விடுதலை புலிகள் அமைப்பின் புலம்பெயா் செயற்பாட்டாளா் விமான நிலையத்தில் வைத்து திருப்பி அனுப்பபட்டாா்..!

ஆசிரியர் - Editor I
தமிழீழ விடுதலை புலிகள் அமைப்பின் புலம்பெயா் செயற்பாட்டாளா் விமான நிலையத்தில் வைத்து திருப்பி அனுப்பபட்டாா்..!

தமிழீழ விடுதலை புலிகளின் புலம்பெயா் செயற்பாட்டாளா் கவிராஜ் சண்முகநாதன் என்பவா் கட்டுநாயக்க விமான நிலையதில் வைத்து திருப்பி அனுப்பபட்டுள்ளதாக சிங்கள ஊடகங்களை மேற்கோள்காட்டி செய்திகள் வெளியாகியுள்ளது. 

இலங்கை படையினர் போர்க் குற்றச்செயல்களில் ஈடுபட்டதாக குற்றம் சுமத்தி லண்டனில் போராட்டங்களை இந்த நபரே ஏற்பாடு செய்திருந்தார் எனத் தெரிவிக்கப்படுகிறது.

உறவினர்களை பார்வையிடுவதற்காக இலங்கை வந்த போது குறித்த நபர் விமான நிலையத்திலேயே தடுத்து நிறுத்தப்பட்டு திருப்பி அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்.

இந்த நபர் இலங்கைக்குள் பிரவேசிக்க தடை விதிக்கப்பட்ட கறுப்புப் பட்டியலில் உள்ளடக்கப்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச, பிரதமர் ரணில் விக்ரமசிங்க மற்றும் இலங்கை அரச படையினருக்கு எதிராக இவர் லண்டனில் போராட்டங்கள் மற்றும் ஆர்ப்பாட்டங்களை ஏற்பாடு செய்திருந்தார் என தெரிவிக்கப்படுகிறது.

கட்டுநாயக்கவிலிருந்து லண்டனுக்கு திருப்பி அனுப்பி வைக்கப்பட்ட கவிராஜ், நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் செயற்பாட்டாளர் எனத் தெரியவந்துள்ளது.

எனினும், நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் இந்த விவகாரம் தொடர்பில் எவ்வித தகவல்களையும் இதுவரையில் வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு