உழவு இயந்திரம் கவிழ்ந்து விபத்து..! ஒருவா் உயிாிழப்பு மற்றொருவா் படுகாயம்..

ஆசிரியர் - Editor I
உழவு இயந்திரம் கவிழ்ந்து விபத்து..! ஒருவா் உயிாிழப்பு மற்றொருவா் படுகாயம்..

அக்கரபத்தனை பகுதியில் உழவு இயந்திரம் தடம் புரண்டதில் மரக்கறி பண்ணையில் பணி புாியும் நபா் உயிாிழந்துள்ளாா். 

இந்த சம்பவம் இன்று 31.07.2019 இடம் பெற்றுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

போபத்தலாவ மெனிக்பாலம மரக்கறி பண்னையில் இருந்து 03ம் பிரிவு பகுதிக்கு பொருட்களை ஏற்றி சென்ற போது குறித்த உழவு இயந்திரம்

பாதையை விட்டு விலகி தடம் புரண்டத்தில் சாரதியும் அதன் சேவையாளரும் பலத்த காயங்களுக்குள்ளாகியுள்ளனர். 

இதனையடுத்து அக்கரபத்தனை வைத்தியசாலைக்கு குறித்த இருவரையும் கொண்டு செல்லும் போது மேற்படி சேவையாளர் உயிரிழந்துள்ளதாகவும் 

பலத்தகாயங்களுக்குள்ளான உழவு இயந்திர சாரதி அக்கரபத்தனை வைத்தியசாலையில் இருந்து நுவரெலியா மாவட்ட வைத்தியசாலைக்கு மாற்றபட்டுள்ளதாக 

வைத்தியசாலையின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.சம்பவத்தில் 35வயதுடைய எஸ்.பொடிமாத்தியா என்ற ஒரு பிள்ளையின் தந்தையே 

இவ்வாறு உயிரிழந்துள்ளதாக காவல்துறையினர் மேலும் தெரிவித்தனர்சம்பவத்தில் உயிரிழந்த நபரின் சடலம் அக்கரபத்தனை வைத்தியசாலையின் 

பிரேத அறையில் வைக்கபட்டுள்ளதோடு, சட்ட வைத்திய அதிகாரியின் பிரேத பரிசோதனைக்காக சடலம் நுவரெலியா மாவட்ட வைத்தியசாலைக்கு 

கொண்டு செல்லபடவுள்ளதாக வைத்தியசாலையின் வட்டாராங்கள் தகவல் தெரிவித்தன.இச்சம்பவம் தொடர்பில் 

மேலதிக விசாரனைகளை அக்கரபத்தனை காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடதக்கது.

.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு