துாக்கு தண்டணை பெறவே குழந்தைகளை கொலை செய்தேன்..! அறிவுகெட்ட தாய் வாக்குமூலம்..

ஆசிரியர் - Editor I
துாக்கு தண்டணை பெறவே குழந்தைகளை கொலை செய்தேன்..! அறிவுகெட்ட தாய் வாக்குமூலம்..

தற்கொலை செய்வதற்கு பல தடவைகள் முயற்சித்தேன். ஆனால் அது நடக்கவில்லை. ஆகவே பிள்ளைகளை கொலை செய்தால் துாக்கு தண்டணை கிடைக்கும் என்றே கொலை செய்தேன் என இரட்டை குழந்தைகளை கொலை செய்த தாய் வாக்குமூலம் வழங்கியுள்ளாா். 

அம்பாறை - நிந்தவூர் பகுதியில் பத்து மாதங்களேயான இரட்டை குழந்தைகள் கடந்த திங்கட்கிழமை கொடூரமான முறையில் படுகொலை செய்யப்பட்டிருந்தன. இந்த படுகொலைகளை தாய் மேற்கொண்டிருக்கலாம் 

என சந்தேகிக்கப்பட்டதுடன், சுயநினைவற்ற நிலையில் இருந்த தாயை பொலிஸார் மீட்டிருந்தனர். இவ்வாறான சந்தர்ப்பத்தில் விசாரணைகளின் போது வழங்கிய வாக்குமூலத்திலேயே என்.அனிஷா இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை குறித்த குழந்தைகளின் தாயான அனிஷா தற்போது கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலையின் உளவள பிரிவில், கணவர் ஏ.சியாதுல் ஹக்கின் கண்காணிப்பில் சிகிச்சை பெற்றுவருவதாக தெரியவருகிறது.

மேலும் சம்மாந்துறை நீதிமன்றத்தின் உத்தரவின் பின்னர் அங்கொடை வைத்தியசாலையின் உளவள பிரிவில் மேலதிக சிகிச்சைக்காக அவர் அனுமதிக்கப்பட உள்ளமை குறிப்பிடத்தக்கது.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு