திட்டமிட்ட பௌத்த மயமாக்கலை கண்டித்து போராட்டம்..! இந்து சமயத்தவா்களை ஒன்றுகூட அழைப்பு.

ஆசிரியர் - Editor I
திட்டமிட்ட பௌத்த மயமாக்கலை கண்டித்து போராட்டம்..! இந்து சமயத்தவா்களை ஒன்றுகூட அழைப்பு.

இந்து சமய ஆலயங்கள் மீது மேற்கொள்ளப்படும் திட்டமிட்ட பௌத்தமயமாக்கலை கண்டித்து எதிா்வரும் 3ம் திகதி காலை 9 மணி தொடக்கம் 10 மணிவரை நல்லை ஆதீனம் முன்பாக கவனயீா்ப்பு போராட்டம் ஒன்று நடாத்தப்படவுள்ளது. 

இந்து அமைப்புக்களின் ஒன்றியம் சாா்பில் வடமாகாணசபை அவை தலைவா் சீ.வி.கே.சிவஞானத்தின் ஒழுங்கமைப்பில் இந்த போராட்டம் மிக அமைதியான முறையில் இடம்பெறவுள்ளது. இ து குறித்து அவைத் தலைவா் கூறுகையில், 

சமீப கால­மாக வடக்கு, கிழக்கு மற்றும் மலை­யகப் பகு­தி­களில் அமைந்­தி­ருக்கும் இந்து ஆல­யங்­ க­ளான வெடுக்­கு­நாரி சிவன் ஆலயம், கன்­னியா பிள்­ளையார் ஆலயம், கந்­தப்­பிள்ளை விநா­யகர் ஆலயம் போன்­ற­வையும் திருக்­கே­தீச்­சர ஆலய வளைவு பிற சம­யத்­த­வர்­க­ளால் 

முறையே அழிக்­கப்­பட்டும் உடைக்­கப்­பட்டும் வரு­வ­த­னாலும் பௌத்­தர்கள் வாழாத பிர­தே­சங்­ களில் விகா­ரைகள் அமைப்­பதும் இலங்கை வாழ் இந்­துக்கள் அனை­வரும் அச்­சத்தில் மூழ்­க­ வேண்­டி­ய­தொரு துர்ப்­பாக்­கிய நிலையை தற்­போது எதிர்­கொண்டு வரு­கின்­றனர்.

இந்த அதர்ம செயல்­க­ளைக்­ கண்­டித்தும் மத நல்­லி­ணக்­கத்தை வலி­யு­றுத்­தியும் எதிர்­வரும் சனிக்­கி­ழமை நல்லை ஆதீன முதல்வர் ஸ்ரீலஸ்ரீ சோம­சுந்­தர பிர­மச்­சா­ரிய சுவா­மிகள் தலை­மையில் நல்லை ஆதீன முன்­றிலில் இந்து அமைப்­புகள் ஒன்­றி­யமும் 

இந்­து­ சமயப் பேர­வையும் இணைந்து முன்­னெ­டுக்கும் அமைதி வழி செயற்­பாட்டில் அனைத்து இந்து அமைப்­பு­களின் பிர­தி­நி­திகள், ஆலய அறங்­கா­ல­வலர், உள்­ளூ­ராட்சி மன்றப் பிர­தி­நி­திகள், ஆர்­வ­லர்கள் மற்றும் பொது மக்கள் தவ­றாது பங்குகொண்டு 

இந்துக்களின் மன உணர்வுகளை வெளிப்படுத்தி வன்முறையாளர்களின் அத்துமீறல்களை அவர்களுக்கு உணர்த்த முன்வருமாறு கேட்டிருக்கின்றாா்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு