50 கிலோ மீனுடன் விரட்டப்பட்ட மீன் வியாபாாி..! பிரதேசசபை தவிசாளருடன் தா்க்கம்..

ஆசிரியர் - Editor I
50 கிலோ மீனுடன் விரட்டப்பட்ட மீன் வியாபாாி..! பிரதேசசபை தவிசாளருடன் தா்க்கம்..

வவுனியா தெற்கு தமிழ் பிரதேசசபை எல்லைக்குள் மீன் விற்பனையில் ஈடுபட்டிருந்தவரை வெளியேற்றியதால் குழப்பமான நிலை உருவானதுடன், 50 கிலோ மீனுடன் மீன் வியாபாாி அங்கிருந்து அகற்றப்பட்டிருக்கின்றாா். 

வவு­னியா குட்செட் வீதி­யில் ஒரு­வர் மீன்­கடை அமைத்து விற்­ப­னை­யில் ஈடு­பட்­டு­வந்­தார். அந்த இடத்­துக்­குச் சென்ற வவு­னியா தெற்கு தமிழ் பிர­தேச சபைத் தவி­சா­ளர் து.நட­ரா­ஜ­சிங்­கம் (ரவி) மற்­றும் பிர­ தேச சபை அலு­வ­லர்­கள் விற்பனை நிலையத்தை 

அகற்­று­மாறு மீன்­கடை உரி­மை­யா­ள­ரி­டம் தெரி­வித்­துள்­ள­னர். இத­னால் முரண்­பாடு ஏற்­பட்­ட­ போது, மீன்­க­டையை மூடு­மா­றும் அலு­வ­லத்­தில் வந்து தன்­னைச் சந்­திக்­கு­மா­றும் தவிசாளர் கூறிச் சென்­றார். அத­னால் மீன் கடை உரி­மை­யா­ளர் 

சுமார் 50கிலோ மீன்­களை பட்டா ரக வாக­னத்­தில் ஏற்­றிக்­கொண்டு அங்­கி­ருந்து சென்­ றார். இரண்டு வரு­டங்­க­ளாக இந்த இடத்­தில் வியா­பா­ரம் மேற்­கொண்டு வரு­கின்­றேன். தற்­போது பிர­தேச சபை­யி­னர் நிலை யத்தை அகற்­று­மாறு தெரி­விக்­கின்­ற­னர். 

50கிலோகி­ராம் மீன்­களை என்ன செய்­வது?” என்று அந்த விற்பனையாளர் தெரி­வித்­தார். இந்த விட­யம் தொடர்­பாக வவு­னியா தெற்கு தமிழ் பிர­தேச சபைத் தவி­சா­ளர் து.நட­ரா­ஜ­சிங்­கத்­தி­டம் கேட்­ட­போது, “அந்­தப் பகு­தி­யில் பிர­தேச சபை­யி­னர் மீன் விற்­பனை நிலை­யம் 

அமைத்து குத்­த­கைக்கு வழங்­கப்­பட்­டுள்­ளது. இவ்­வா­றான நபர்­க­ளின் செயற்­பாட்­டால் பிர­தேச சபை­யி­ன­ரால் அமைக்­கப்­பட்ட மீன் விற்­பனை நிலை­யத்­தில் வியா­பார நட­வ­டிக்கை மந்த கதி­ யில் இடம்­பெ­று­கின்­றது என்று அங்­குள்ள விற்பனையாளர்கள் முறைப்­பாடு தெரி­விக்­கின்­ற­னர். 

அத­னால் சபை அனு­ம­தி­யின்றி இடம்­பெற்ற மீன் விற்­ப­னையை நிறுத்­தி­யுள்­ளோம்” – என்று தெரி­ வித்­தார்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு