சாவகச்சோி மக்களுக்கு எச்சாிக்கை..! இருநாள் காய்ச்சல் இருந்தால் உடனே வைத்தியசாலைக்கு செல்லுங்கள்..

ஆசிரியர் - Editor I
சாவகச்சோி மக்களுக்கு எச்சாிக்கை..! இருநாள் காய்ச்சல் இருந்தால் உடனே வைத்தியசாலைக்கு செல்லுங்கள்..

சாவகச்சோி பிரதேசத்தில் டெங்கு காய்ச்சலின் தாக்கம் அதிகாித்துள்ள நிலையில் 2 நாட்களுக்கு மேல் காய்ச்சல் இருந்தால் அருகில் உள்ள மருத்துவமனைக்கு செல்லுமாறு சாவகச்சோி சுகாதார மருத்துவ அதிகாாி பணியகம் அறிவித்துள்ளது. 

தென்­ம­ராட்சிப் பிர­தே­சத்­தில்  அண்­மை­யில் பெய்த மழையை அடுத்து டெங்கு குடம்­பி­கள் நுளம் பாக மாறி தாக்­கும் அபா­யம் காணப்­ப­டு­கி­றது. தென்­ம­ராட்சி பிர­தே­சத்­தில் நாவற்­குழி கிழக்கு, மந்­து­வில், மட்­டு­வில், சாவ­கச்­சேரி நக­ரம் போன்ற பிரி­வு­க­ளில் 

தொடர்ச்­சி­யாக டெங்கு காய்ச்­ச­லால் பாதிக்­கப்­பட்­டோர் சிகிச்சை பெற்று வருகின்­ற­னர். இத­ னை­ய­டுத்து மத்தி சுகா­தார அமைச்­சின் டெங்கு கட்­டுப்­பாட்டு அல­கி­னர் சாவ­கச்­சேரி சுகா­தார மருத்­துவ அதி­காரி பணி­ய­கப் பிரிவை டெங்கு அபா­யப் பிர­தே­ச­மாக அறி­வித்­துள்­ள­னர்.

பிர­தே­சத்­தில் மேற்­கொள்­ளப்­பட்ட பரி­சோ­த­னை­க­ளால் குறை­வ­டைந்­தி­ருந்த டெங்கு மீண்­டும் உரு­வா­கா­மல் தடுக்கப் பொது மக்­கள் தமது குடி­யி­ருப்­பு­கள் மற்­றும் காணி­க­ளைத் துப்பு­ர­வாக வைத்­தி­ருக்­கு­மா­றும், டெங்கு நுளம்பு உற்­பத்­தி­யா­கும்

தண்­ணீர் ஏந்தும் பொருள்­கள் காணப்­ப­டின் உட­ன­டி­யாக அப்­பு­றப்­ப­டுத்தி நுளம்பு உற்­பத்­தி­யா­வ­ தைத் தடுக்­கு­மா­றும் அறி­வித்­துள்­ள­னர்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு