500 ஏக்கா் சவுக்கு காடு சமுதாய காடாக அறிவிக்கப்பட்டது..! திட்டமிட்ட ஆக்கிரமிப்புக்கு முற்றுப்புள்ளி..

ஆசிரியர் - Editor I
500 ஏக்கா் சவுக்கு காடு சமுதாய காடாக அறிவிக்கப்பட்டது..! திட்டமிட்ட ஆக்கிரமிப்புக்கு முற்றுப்புள்ளி..

யாழ்.வடமராட்சி கிழக்கு பகுதியில் உள்ள 500 ஏக்கா் சவுக்கங்காட்டை சமுதாக காடாக அறிவிக் குமாறு யாழ்.மாவட்ட ஒருங்கிணைப்பு குழுவில் தீா்மானம் எடுக்கப்பட்டுள்ளது. 

மணற்­காட்­டில் உள்ள சவுக்­கங்­காடு புலி­க­ளால் ஏற்­ப­டுத்­தப்­பட்­டது. இங்கே அடிக்­கடி தீ பர­வு­கின்­ றது. அவ்­வாறு பர­வும் தீ கிராம அபி­வி­ருத்­திச் சங்­கத்­தின் முயற்­சி­யால் 

கட்­டுப்­ப­டுத்­தப்­ப­டு­கின்­றது. பிர­தேச செய­ல­கத்­தின் கட்­டுப்­பாட்­டில் இந்­தக் காடு இருந்­தா­லும், அதை கிராம அபி­வி­ருத்­திச் சங்­கம்தான் பரா­ம­ரித்து, பாது­காத்து வரு­கி­றது. 

எனவே இந்த இடத்தை சமு­தா­யக் காடாக அறி­விக்க வேண்­டும் என்று பிர­தேச செய­லர் கன­கேஸ்­ வ­ரன் வலி­யு­றுத்­தி­னார். இந்தக் காடு 30க்கும் மேற்­பட்ட தட­வை­கள் தீ ஏற்­பட்­ட­தால் 

பெரும் செல­வும் ஏற்­பட்­டது. இதே­நே­ரம் இர­வோடு இர­வாக வன­வ­ளத் திணைக்­க­ளத்துக்குச் சொந்­த­மா­னது என்று பெயர்ப் பலகை போடப்­பட்­டது. 

தீ பர­வி­னால் கட்­டுப்­ப­டுத்­து­வது மாவட்­டச் செய­ல­க­மும் உள்­ளூ­ராட்சி திணைக்­க­ள­முமே.அவ்­வா­  றி­ருக்க திணைக்­க­ளம் உரிமை கோரு­வ­தாக இடர் முகா­மைத்­து­வப் பிரி­வின் 

அதி­காரி ச.ரவி தெரி­வித்­தார். குறித்த நிலம் தற்­போது வரை­யில் பிர­தேச செய­ல­ருக்­குச் சொந்­த­ மான நிலம்­தான். அது காடு என்­ப­தற்­கான எந்த அர­சி­தழ் அறி­வித்­த­லும் கிடை­யாது. 

திருட்­டுத்­த­ன­மாக பலகை நடப்­பட்­டுள்­ளது என்று மரு­தங்­கேணி பிர­தேச செய­லர் தெரி­வித்­தார். இது தொடர்­பாக ஆராய்ந்த இணைத்­த­லை­மை­கள் அந்­தக் காட்டை சமு­தா­யக் காடாக 

அறி­விக்­கத் தீர்­மா­னம் நிறை­வேற்­றினர். பெயர்ப்­ப­ல­கையை அங்­கி­ருந்து அகற்­றி­வி­டு­மா­றும் பிர­ தேச செய­ல­ருக்கு ஒருங்­கி­ணைப்­புக் குழு கட்­ட­ளை­யிட்­டது.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு