வடக்கு மக்களுக்கு மகிழ்ச்சியான செய்தி..! வடக்குக்கான புகைரத சேவை 6 ஆக அதிகாிக்கப்படுகிறது..

ஆசிரியர் - Editor I
வடக்கு மக்களுக்கு மகிழ்ச்சியான செய்தி..! வடக்குக்கான புகைரத சேவை 6 ஆக அதிகாிக்கப்படுகிறது..

யாழ்ப்பாணம்- கொழும்பு ரயில் சேவை ஆறாக அதிகரிக்கிறது. புதிதாக இரு சேவைகள்.யாழ்ப்பாணத்துக்கும்- கொழும்புக்கும் இடையில் தினமும் நடைபெறும் ரயில் சேவை நான்கிலிருந்து ஆறாக நாளை வியாழக்கிழமை முதல் அதிகரிக்கப்படவுள்ளது.

இதன்பிரகாரம் இரவு தபால் ரயில் சேவையில் நேரமாற்றம் ஏற்பட்டுள்ளதாக புகையிரத திணைக்கள தரப்பினர் தெரிவித்தனர்.அதாவது தற்போது தினமும் காலை 6.10 மணிக்கு உத்தரதேவி நகர்சேர் கடுகதியும் அதன்பின் காலை 9.35 யாழ்தேவியும் 

பிற்பகல் 1.45 மணிக்கு குளிரூட்டப்பட்ட அதிசொகுசு நகர்நேர் கடுகதியும் இரவு 7 மணிக்கு தபால் ரயில் சேவையும் இடம்பெற்று வருகின்றன. இந்நிலையில் இந்தியாவிலிருந்து இறக்கப்பட்ட ரயில்கள் சேவையில் ஈடுபடவுள்ள நிலையில் உத்தரதேவி ரயில் சேவைக்கு அடுத்ததாக 

புதிய ரயில் சேவை யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்புக்கு செல்லவுள்ளது.பிற்பகல் 1.45 மணிக்கு இடம்பெறும் குளிரூட்டப்பட்ட நகர்சேர் கடுகதிக்கு பின்னா் மாலை 5.45 மணிக்கு காங்கேசன்து றையிலிருந்து கொழும்புக்கு மற்றுமொரு புதிய ரயில் சேவையும் இடம்பெறவுள்ளது. 

இவ்வாறான நிலையில் இரவு தபால் ரயில் சேவை நாளை வியாழக்கிழமை முதல் காங்கேசன்துறையிலிருந்து 7.45 மணிக்கு புறப்பட்டு இரவு 8.10 இற்கு யாழ்ப்பாணத்தை வந்தடைந்து கொழும்புக்கு புறப்படவுள்ளது.

இவ்வாறான நிலையில் கொழும்பிலிருந்து புறப்படும் இரவு தபால் சேவை இரவு 9 மணிக்கு யாழ்.நோக்கி புறப்படவுள்ளது. தற்போது இரவு தபால் சேவை 8.30 மணிக்கு யாழ்.நோக்கி புறப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் ரயில் சேவை குறித்தான உறுதிப்படுத்தப்பட்ட அட்டவணை நாளை வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு