10 ஏக்கா் காட்டை அழித்த கூட்டமைப்பு எம்.பி சாந்தி சிறிஸ்கந்தராசா..! சபாநாயகாின் கவனத்திற்கு சென்றது..

ஆசிரியர் - Editor I
10 ஏக்கா் காட்டை அழித்த கூட்டமைப்பு எம்.பி சாந்தி சிறிஸ்கந்தராசா..! சபாநாயகாின் கவனத்திற்கு சென்றது..


சாந்தி சிறிஸ்காந்தராசா காடழித்து சொத்தாக்கிய சம்பவம்தொடர்பில்  சபாநாயகர் அலுவலகமும் கவனம்செலுத்துகிறது. குறித்த சம்பவம் தொடர்பில் சபாநாயகரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டதை அடுத்து சபாநாயகர் அலுவலகம் சம்பவம் தொடர்பில் கவனம் செலுத்துகிறது.

இதனை உறுதிப்படுத்தும் வகையில் சபாநாயகர் அலுவலகம் கடிதம் மூலம் தகவல் வழங்கியுள்ளது. குறித்த விடயம் தொடர்பில் நாடாளுமன்ற சபாநாயகரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாக சபாநாயகரின்  செயலாளர் கடிதம்ஒன்றின் ஊடாக  தெரிவித்துள்ளார்.

தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் நியமன நாடாளுமன்ற உறுப்பினர் சாந்தி சிறிஸ்காந்தராசா முல்லைத்தீவு மாவட்டத்தின் மாந்தை கிழக்கு பிரதேச செயலர் பிரிவில் 10 ஏக்கர் காட்டினை அழித்தும், பாலி ஆற்றின் ஒரு பகுதியை ஆக்கிரமித்தும் விவசாயம் செய்து வருகின்றமை தொடர்பில் தொடர்ந்தும் அவதானம் செலுத்தப்படுகின்றது.

கிளிநொச்சி ஜெயபுரம், ஆனைவிழுந்தான் மக்களிற்கு ஒரு நியாயம், மக்கள் பிரதிநிதிக்கு இன்னொரு நியாயமோ?

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு