பாடசாலை மாணிவி மீது பாலியல் துா்நடத்தை..! யாழ்.நகாில் உள்ள பாடசாலை ஒன்றின் ஆசிாியா்கள் 3 போ் விடுதலை..!

ஆசிரியர் - Editor I
பாடசாலை மாணிவி மீது பாலியல் துா்நடத்தை..! யாழ்.நகாில் உள்ள பாடசாலை ஒன்றின் ஆசிாியா்கள் 3 போ் விடுதலை..!

பாடசாலை மாணவிக்கு நடந்த பாலியல் துஷ்பிரயோகத்தை மறைத்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட 3 ஆசிாியா்களை 3 ஆண்டுகள் கழித்து குற்றமற்றவா்கள் என விடுவித்து யாழ்.நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

யாழ்ப்பாணத்தை அண்மித்துள்ள பாடசாலை ஒன்றில் தரம் 8 இல் கல்வி பயின்ற மாணவி ஒருவருக்கு அந்தப் பாடசாலையைச் சேர்ந்த ஆசிரியர் ஒருவரால் பாலியல் துர்நடத்தை மேற்கொள்ளப்பட்டது என்று குற்றஞ்சாட்டப்பட்டது.

பாலியல் துர்நடத்தையின் பின்னர் அதே பாடசாலையைச் சேர்ந்த ஆசிரியர் ஒருவர் மாணவியின் வீட்டுக்குச் சென்று சம்பவத்தை வெளியில் கூறவேண்டாம் என்று மிரட்டினர் என்றும் குற்றஞ்சாட்டப்படது.

இந்தச் சம்பவம் கடந்த 2016 ஆம் ஆண்டு ஜூன் மாதம் இடம்பெற்றது. சம்பவத்துடன் தொடர்புடையவர் என்று குற்றஞ்சாட்டப்பட்ட ஆசிரியர் கைது செய்யப்பட்டார். அதிபர், மற்றும் மாணவியை மிரட்டினார் என்று தெரிவிக்கப்பட்ட ஆசிரியர், 

மற்றும் வகுப்பாசிரியரான பெண் ஆசிரியர் ஒருவர் பொலிஸாரின் விசாரணைக்குள் கொண்டு வரப்பட்டனர். விசாரணைகளின் பின்னர் அவர் விளக்கமறியலில் வைக்கப்பட்டனர். பின்னர் இருவாரங்களில் அவர்கள் பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டனர். 

பணியில் இருந்து இடைநிறுத்தப்பட்டிருந்தனர். வழக்கு விசாரணைகள் இன்று இடம்பெற்றது. பாலியல் துர்நடத்தைச் சம்பவத்தை மூடி மறைத்தார் என்ற குற்றஞ்சாட்டப்பட் அந்தப் பாடசாலை அதிபர், மற்றும் மாணவியை வீடு சென்று மிரட்டினார் 

என்று குற்றஞ்சாட்டப்பட்ட ஆசிரியர், மற்றும் வகுப்பாசிரியரான பெண் என மூவரும் குற்றமற்றவரர்கள் என்று கருதி மன்று விடுவித்தது. எனினும் வழக்கின் பிரதான எதிரியான பாலியல் துர்நடத்தையைப் புரிந்தார் என்று 

குற்றஞ்சாட்டப்பட்ட ஆசிரியர் மீதான வழக்கு தொடர்ந்து விசாரணைக்கு உட்படுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு