அதிகாலையில் நடந்த கோர விபத்து..! 6 மாத குழந்தை உயிாிழப்பு. தாய் வவுனியா வைத்தியசாலையில் கவலைக்கிடம்..

ஆசிரியர் - Editor I
அதிகாலையில் நடந்த கோர விபத்து..! 6 மாத குழந்தை உயிாிழப்பு. தாய் வவுனியா வைத்தியசாலையில் கவலைக்கிடம்..

அனுராதபுரம்- பதவியா பகுதியில் இடம்பெற்ற வீதி விபத்தில் 6 மாத குழந்தை உயிாிழந்துள்ள நிலையில், தாய் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளாா். 

குறித்த விபத்து நேற்று இரவு 8.45 மணியளவில் இடம்பெற்றுள்ளது.அனுராதபுரம் - பதவியா பிரதான வீதியூடாக பயணித்த முச்சக்கர வண்டி ஒன்றுடன் அதே வீதி வழியாக 

எதிர்த்திசையில் பயணித்த வேன் ஒன்றுடன் மோதி விபத்துக்குள்ளானது.குறித்த விபத்தில் முச்சக்கர வண்டியில் பயணித்த தாயும், 6 மாத குழந்தையும் படுகாயமடைந்த நிலையில் 

பதவியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, அங்கிருந்து மேலதிக சிகிச்சைக்காக வவுனியா வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். 

வவுனியா வைத்தியசாலைக்கு கொண்டு செல்வதற்கு முன்னதாகவே அனுராதபுரம், கல்கடவெல, தீபத்துகம பகுதியைச் சேர்ந்த 6 மாத குழந்தையான இசுற செத்சிறு 

என்ற ஆண் குழந்தை உயிரிழந்துள்ளதுடன் குழந்தையின் தாயாரான 29 வயதான ஹங்கனி சமன்திலக படுகாயமடைந்த நிலையில் 

வவுனியா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.குறித்த சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை பதவியா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு