பணம் கட்ட வழியில்லாவிட்டால் படுக்க அழைக்கிறாா்கள்..! நுண்கடன் நிறுவனங்கள் அட்டகாசம்..

ஆசிரியர் - Editor I
பணம் கட்ட வழியில்லாவிட்டால் படுக்க அழைக்கிறாா்கள்..! நுண்கடன் நிறுவனங்கள் அட்டகாசம்..

மக்களிடம் நுண்கடன் தொடா்பான அறிவில்லாமையை பயன்படுத்தி நுண்கடன் நிறுவனங்கள் மக்களை அச்சுறுத் துவதுடன், பெண்களிடம் பாலியல் லஞ்சம் கோரும் நடவடிக்கைகளும் இடம்பெற்றுவருகிறது. ஆகவே நுண்கடன் தொடா்பில் பொதுவான தீா்மானம் எடுக்கப்படவேண்டும் என மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் கரவெட்டி பிரதேச செயலா் கூறியுள்ளாா். 

நேற்று நடைபெற்ற யாழ்.மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டத்திலேயே அவா் மேற்கண்டவாறு சுட்டிக்காட்டியிரு க்கின்றாா். இதன்போது மேலும் அவா் கூறுகையில், 

கர­வெட்­டிப் பிர­தே­சத்­தில் நுண்­நிதி நிறு­வ­னங்­க­ளால 16 குடும்­பங்­கள் விவா­க­ரத்­துப் பெற்­றுள்­ளன. இரண்டு குடும்­ பங்­க­ளில் தாய், தந்தை ஆகி­ய­வர்­கள் தலை­ம­றை­வா­கி­ய­தால் அவர்­க­ளு­டைய பிள்­ளை­கள் பாட்டி, அல்­லது உற­வி­ னர்­க­ளு­டன் வாழ்­கின்­ற­னர். உயிர் மாய்ப்­புக்­க­ளின் எண்­ணிக்­கை­யும் அதி­க­ரித்­துக் கொண்டே செல்­கின்­றது. இந்த விட­யம் தொடர்­பில் மாவட்ட மட்­டத்­தில் 

பொது­வான தீர்­மா­னம் ஒன்று எடுத்­தால்­தான் சிறந்­தது. அண்­மை­யில் நுண்­நிதி நிறு­வ­னங்­களை அழைத்து கலந்­து­ ரை­யா­டி­னோம். இந்த நிதி வழங்­கல், கடன்­வ­ழங்­கல் தொடர்­பாக எந்­த­வொரு தெளி­வும் மக்­க­ளுக்கு வழங்­கப்­ப­ட­ வில்லை. எனவே கிராம அலு­வ­ல­க­ரின் அனு­ம­தி­யின்றி எந்­தக் கடன்­க­ளை­யும் வழங்­க­வேண்­டாம் என்று கேட்­டுக்­ கொண்­டுள்­ளோம்.

தவ­றான கருத்­துக்­களை முன்­வைத்து, பொய்­யான கார­ணங்­க­ளைக் கூறித்­தான் கடன்­களை எடுக்­கின்­றார்­கள். இந்த விட­யங்­கள் சீர்­செய்­யப்­ப­ட­வில்லை என்­றால் நிச்­ச­ய­மாக இந்த கடன்­க­ளைப் பெறும் குடும்­பங்­க­ளுக்­கி­டை­யில் பாதிப்­புக்­கள் ஏற்­ப­டும். இப்­போது 16 குடும்­பங்­கள் விவா­க­ரத்­துப் பெற்­றுள்­ளன. அவர்­கள் அனை­வ­ரும் 32 வய­துக்­குட்­ பட்­ட­வர்­கள். இவை எல்­லா­வற்­றுக்­கும் 

முக்­கிய கார­ணம் இந்த நுண்­நி­தி­தான். நுண்­நி­தியை வழங்­கு­வ­தில் தவ­றில்லை. ஆனால் அதற்­குச் சரி­யான விளக்­ கம், அல்­லது ஆவ­ணம், தெளி­வு­கள் வழங்­கப்­ப­ட­வேண்­டும். கையெ­ழுத்­துக்­களை வாங்­கி­விட்டு காசைக் கொடுத்­து­ விட்­டுப்­போ­கின்­றார்­கள். சிலர் அடாத்­தான முறை­யில் கட­னைப் பெறு­வ­தும், கட­னுக்­குப் பதி­லாக பாலி­யல் இலஞ்­ சங்­க­ளைக் கோரு­வ­தும் நடந்து கொண்­டு­தான் இருக்­கின்­றது. 

இது தொடர்­பா­கத் தீர்க்­க­மான முடி­வு­களை எட்­ட­வேண்­டும்.- என்­றார்.

அங்கு கருத்­துத் தெரி­வித்த யாழ்ப்­பாண மாந­கர முதல்­வர் இ.ஆனோல்ட் தெரி­வித்­த­தா­வது.

வங்­கி­க­ளில் கடன் பெறச் சென்­றால் இன்­னு­மோர் வங்­கி­யில் கடன் பெற்­றி­ருப்­பின் இரண்­டா­வது கட­னுக்கு அனு­மதி மறுக்­கப்­ப­டும். இத­னால் அதிக நெருக்­க­டி­யில் இருந்து பய­ணாளி தப்­பிக்­கின்­றார். ஆனால் நுண் நிதி நிறு­வ­னங்­ களோ ஒரு­வர் ஏற்­க­னவே இரு இடத்­தில் கடன் பெற்று 3ஆவது தடவை கடன் கோரி­னா­லும் வழங்­கு­கின்­ற­னர். அதை எவ்­வாறு மீளச் செலுத்­து­வார் என்­பது தொடர்­பில் ஆராய்­வது கிடை­யாது.  

நிறு­வ­னங்­கள் தமது பணத்தை எப்­ப­டி­யும் அற­வி­டு­வோம்?, அத­னால் எமக்­கு­ரிய இலா­பம் கிடைக்­கும் என்­ப­தில் மட்­ டுமே குறி­யாக உள்­ள­னர். இத­னால் ஒரு பய­னாளி ஓர் நிறு­வ­னத்­தில் கடன் பெற்ற நிலை­யில் வேறு நிறு­வ­னத்­தி­ லும் பெறு­வா­ரா­யின், அதை அந்த நிறு­வ­னம் கோர முடி­யாது என்ற நில­மையை உரு­வாக்க வேண்­டும்.-என்­றார்.

அங்கு கருத்­துத் தெரி­வித்த நாடா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரும், இணைத் தலை­வ­ரு­மான மாவை சோ. சேனா­தி­ராஜா தெரி­வித்­த­தா­வது.

வடக்கு, கிழக்­கில் அதிக பெண் தல­மைத்­து­வக் குடும்­பங்­கள் வாழ்­வ­தால் வரு­மா­னம் இன்றி நுண்­க­ட­னைப் பெற்று நெருக்­க­டி­களை சந்­திக்­கின்­ற­னர். இது தொடர்­பாக நிதி அமைச்­சர், தலைமை அமைச்­சர் கவ­னத்­துக்கு கொண்டு சென்று நுண் கடனை நீக்க கடந்த ஆண்டு நட­வ­டிக்கை எடுக்­கப்­பட்­டது. அதை நீக்க ஏற்­பாடு இடம்­பெற்ற சம­யம் அதே­போன்று தெற்­பி­லும் 16 ஆயி­ரம் பேர் 

பாதிப்­ப­டைந்­தி­ருந்­த­மை­யால் நாடு பூரா­க­வும் 40 ஆயி­ரம் பேரின் நுண் கடன் நீக்­கப்­பட்­டது. அவ்­வாறு நீக்­கும்­போது பலர் ஒன்­றுக்கு மேற்­பட்ட நிறு­வ­னங்­க­ளி­லும் சிலர் ஆடம்­ப­ரத் தேவைக்­காக பெற்­றுள்­ள­னர் என்­றும் சுட்­டிக்­காட்­டப்­ பட்ட நிலை­யில் தீர்வு வழங்­கப்­பட்­டது. அதன் பின்பு தற்­போது மீண்­டும் அதே நெருக்­கடி என்­ப­த­னால் உட­ன­டி­யாக நிதி அமைச்­ச­ரன் கவ­னத்­து­கு்கு இந்த விட­யம் கொண்டு செல்­லப்­ப­டும்.-என்­றார்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு