இரத்த வெள்ளத்தில் சடலமாக கிடந்த தாயும், மகனும்..! கிளிநொச்சி- ஜெயந்திநகாில் அதிகாலையில் பயங்கரம்..

ஆசிரியர் - Editor I
இரத்த வெள்ளத்தில் சடலமாக கிடந்த தாயும், மகனும்..! கிளிநொச்சி- ஜெயந்திநகாில் அதிகாலையில் பயங்கரம்..

கிளிநொச்சி ஜெயந்தி நகா் பகுதியில் தாயும் மகளும் இரத்த வெள்ளத்தில் சடலமாக மீட்கப்பட்டிருக்கும் நிலையில் பொலிஸாா் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனா். 

70 வயதான தாயும், 34 வயதான மகனுமே இவ்வாறு இரத்த வெள்ளத்தில் சடலமாக மீட்கப்பட்டிருக்கின்றனா். இந்த சம்பவம் கொலையாக இருக்கலாம். என்ற கோணத்தில்

விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. 

2ம் இணைப்பு..

குறித்த சம்பவம் இரவு இடம்பெற்றிருக்கலாம் என தெரிவிக்கப்படுகின்றது. குறித்த பகுதியில் உள்ள உயிரிழந்த நபர்கள் வசிக்கும் வீட்டிலிருந்தே இருவரும் சடலமாக மீட்கப்பட்டுள்ளனர். 

குறித்த சம்பவத்தில் 70 வயது மதிக்கதக்க விஷ்னுகாந்தி வள்ளியம்மை என்ற தாயாரும், அவரது மகனான 34 வயதான விஷ்னுகாந்தி லிங்கேஷ்வரன் என்ற இளைஞருமே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளனர். 

உயிரிழந்த நபர்களின் உடலில் காயங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளமை ஆரம்பகட்ட விசாரணைகளில் அறியவந்துள்ளது. 

சம்பவம் தொடர்பான பூர்வாங்க விசாரணைகளை கிளிநொச்சி குற்ற தடுப்பு பொலிசார் விரிவாக முன்னெடுத்துள்ளனர். 

உயிரிழந்தவர்களின் சடலம் நீதவான் பார்வையிட்டதன் பின்னர் கிளிநொச்சி வைத்தியசாலைக்கு எடுத்து செல்லப்பட்டு பிரேத பரிசோதனைக்கு உட்படுத்தப்படவுள்ளது. 

மேலதிக விசாரணைகளை கிளிநொச்சி பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.


பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு