அதிகாலை விபத்தில் உயிாிழந்த 12வது சிறுவன் ஜோ்மன் நாட்டை சோ்ந்தவன்..! பெற்றோா் வைத்தியசாலையில்..

ஆசிரியர் - Editor I
அதிகாலை விபத்தில் உயிாிழந்த 12வது சிறுவன் ஜோ்மன் நாட்டை சோ்ந்தவன்..! பெற்றோா் வைத்தியசாலையில்..

கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த சொகுசு பேருந்து விபத்துக்குள்ளானதில் ஜோ்மன் நாட்டை சோ்ந்த 12 வயது சிறுவனும் உயிாிழந்துள்ளான். அவனுடைய பெற்றோா் படு காயமடைந்த நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனா். 

மேலும் உறவினர்களான 5 பேர் படுகாயமடைந்தனர். கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கிப் பயணித்த தனியார் அதிசொகுசு பேருந்து ஒன்றும் தம்புள்ளை நோக்கிப் பயணித்த லொறி ஒன்றும் நேருக்கு நேர் மோதிக்கொண்டதில் இந்த விபத்து இடம்பெற்றது 

என்று பொலிஸார் தெரிவித்தனர். யாழ்ப்பாணம், கல்வியங்காடு பகுதியைச் சேர்ந்த சதாசிவம் சுகந்தி (வயது – 51), அவரின் மகளும் கிளிநொச்சி, கரியாலை நாகபடுவான் மகா வித்தியாலய ஆசிரியையுமான அஜந்தன் கோபிகா (வயது – 30) மற்றும் சதாசிவம் சுகந்தியின் 

மற்றொரு மகளான சத்யாவின் மகன் செல்வரஞ்சன் பிமிநாத் (வயது – 12) ஆகியோரே உயிரிழந்தனர். உயிரிழந்த சுகந்தியின் கணவர் சதாசிவம், கோபிகாவின் இரண்டு மகள்கள், பிமிநாத்தின் தாய் செல்வரஞ்சன் சத்யா மற்றும் பிமிநாத்தின் சகோதரர் 

ஆகியோரே படுகாயமடைந்தனர். ஜேர்மனியிலிருந்து வந்த செல்வரஞ்சன் சத்யாவின் குடும்பமும், யாழ்ப்பாணத்திலிருந்து வாடகைக்கு அமர்த்திய தனியார் அதிசொகுசு பேருந்தில் கட்டுநாயக்க விமான நிலையம் வந்து அவர்களை அழைத்துச் சென்ற 

உறவுகளுமே இந்த விபத்தில் சிக்கியுள்ளனர். உயிரிழந்தவர்களின் சடலங்கள் மதவாச்சி வைத்தியசாலையின் பிண அறையில் வைக்கப்பட்டுள்ளன.விபத்தில் காயமடைந்த ஏனைய ஐவரும் மேலதிக சிகிச்சைகளுக்காக அனுராதபுரம் 

வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.காயமடைந்தவர்களில் செல்வரஞ்சன் சத்யா பலத்த காயமடைந்துள்ளார் என்று அனுராதபுரம் வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்தன.இந்த விபத்துடன் தொடர்புடைய பாரவூர்தியின் சாரதி சம்பவ 

இடத்திலிருந்து தப்பிச் சென்றுள்ளார். தனியார் அதிசொகுசு பேருந்துச் சாரதி கைதுசெய்யப்பட்டுள்ளார். இந்த விபத்துச் சம்பவம் தொடர்பில் மதவாச்சிப் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு