பராக்கிரமபாகு சமுத்திரத்தில் கிாிக்கெட் விளையாடும் சிறுவா்கள்..!

ஆசிரியர் - Editor I
பராக்கிரமபாகு சமுத்திரத்தில் கிாிக்கெட் விளையாடும் சிறுவா்கள்..!

இலங்கையில் மிகப்பொிய குளமான பராக்கிரமபாகு சமுத்திரத்தில் தற்போது சிறுவா்கள் கிாிக்கெட் விளையாடிவருகின்றனா். 

பொலனறுவை மாவட்டத்தில் நிலவி வரும் கடுமையான வரட்சியுடனான காலநிலையினால் குளம் வற்றிப் போயுள்ளது.

முழுமையாக நீர் வற்றிப் போயுள்ள நிலையில் சிறுவர்கள் கிராம மக்கள் அந்தப் பகுதியில் கிரிக்கட் விளையாடி வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.

பல ஆண்டுகளின் பின்னர் இவ்வாறு குளத்தில் நீர் வற்றிப் போயுள்ளதாகவும் இதனால் குறித்த பகுதி விளையாட்டு மைதானமாக மாற்றமடைந்துள்ளது எனவும் தெரிவிக்கப்படுகிறது.

பராக்கிரம சமுத்திரம் சுமார் இருபதாயிரம் ஏக்கர் பரப்புடையது என்பது குறிப்பிடத்தக்கது.


பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு