முட்டாள் தேரா்..! ரத்ன தேரரை கேளா கேள்வி கேட்டாரம் மஹிந்த..

ஆசிரியர் - Editor I
முட்டாள் தேரா்..! ரத்ன தேரரை கேளா கேள்வி கேட்டாரம் மஹிந்த..

மஹிந்த ராஜபக்ஸ ரத்ன தேரரை தகாத வாா்த்தைகளால் திட்டி தீா்த்ததாக கொழும்பு ஊடகம் ஒன்றை மேற்கோள்காட்டி செய்திகள் வெளியாகியுள்ளது. 

சா்ச்சைக்குாிய குருநாகல் வைத்தியர் ஷாபியின் விவகாரம் தொடர்பில் பொதுஜன பெரமுன கட்சியை தேவையற்ற வகையில் தொடர்புப்படுத்தி 

அசௌகரியங்களை ஏற்படுத்தியுள்ளதாக மஹிந்த திட்டியுள்ளார். ரத்ன தேரர் மஹிந்த ராஜபக்சவை சந்தித்த போது, 

கடும் கோபத்துடன் மோசமான வார்த்தைகளை பயன்படுத்தியதாக தெரிவிக்கப்படுகிறது. இவ்வாறான செயல்களை செய்ய கூடாதென 

நான் கூறியிருக்கின்றேன் அல்லவா? தற்போது மக்களை எப்படி எதிர்கொள்வது? இனவாதம் என்றாலும் தூண்டிவிடுவதற்கு நேரம் ஒன்று உள்ளது. 

எப்போதும் அதனை செய்தால் அசிங்கப்பட நேரிடும். இந்த முட்டாள் தேரர் எந்த நேரமும் தேவையற்ற வேலைகளையே செய்தால். 

எல்லா விடயங்களிலும் தலையிடுவார். அவரால் இறுதியில் சிக்கலில் சிக்கிக் கொள்வது நான் தான்” எனவும் மேலும் சில மோசமான வார்த்தைகளையும் 

அவர் பயன்படுத்தியுள்ளதாக குறித்த ஊடகம் சுட்டிக்காட்டியுள்ளது.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு