கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் வந்த பேருந்து விபத்து..! 3 போ் உயிாிழப்பு, 5 போ் படுகாயம்..

ஆசிரியர் - Editor I
கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் வந்த பேருந்து விபத்து..! 3 போ் உயிாிழப்பு, 5 போ் படுகாயம்..

மதவாச்சி பகுதியில் இன்று அதிகாலை இடம்பெற்ற கோர விபத்தில் 3 போ் உயிாிழந்துள்ளதுடன் 5 போ் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமிக்கப்பட்டுள்ளனா். 

யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த சொகுசு பேருந்து ஒன்றும், தம்புள்ளை நோக்கி பயணித்த லொறி ஒன்றும் நேருக்கு நேர் மோதியமையினால் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது.

இந்த விபத்தில் 53 வயதான ஆண் ஒருவரும், 30 வயதான இளைஞர் ஒருவரும் 12 வயதான சிறுவனும் உயிரிழந்துள்ளனர்.

உயிரிழந்த மூவரம் யாழ்ப்பாணத்தை சேர்ந்தவர்கள் என பொலிஸார் தெரிவித்துள்ளனர். ஏனைய காயமடைந்தவர்கள் அனுராதபுரம் வைத்தியசாலைக்கு 

மாற்றி அனுப்பப்பட்டுள்ளனர். உயிரிழந்தவர்களின் சடலம் மதவாச்சி வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளனர்.

விபத்தை ஏற்படுத்திய லொரியின் சாரதி அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு