பாரவூா்தியுடன் நேருக்கு நோ் மோதிய பேருந்து..! ஒருவா் பலி, 6 போ் படுகாயம்..

ஆசிரியர் - Editor I
பாரவூா்தியுடன் நேருக்கு நோ் மோதிய பேருந்து..! ஒருவா் பலி, 6 போ் படுகாயம்..

கொழும்பு - கண்டி பிரதான வீதியில் நிட்டம்புவ - கலல்பிட்டி பகுதியில் இன்று கொழும்பிலிருந்து கந்துருவெல நோக்கிச் சென்ற தனியார் பஸ் ஒன்று முன்னால் சென்ற காரை கடந்து செல்ல முற்பட்ட போது எதிர் திசையில் வந்த லொறியுடன் 

நேருக்கு நேர் மோதியே குறத்த விபத்து ஏற்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்தது. இதன்போது இரு சாரதிகள் உட்பட 7 பேர் காயமடைந்து வத்திபிட்டிவல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர். 

பின்னர் படுகாயமடைந்திருந்த லொறியின் சாரதி சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்துள்ளார். தெஹிவளை பகுதியைச் சேர்ந்த 44 வயதுடைய ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். காயமடைந்தவர்கள் 6 பேரும்

 வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு