யாழ்.நகரை அண்டிய பகுதியில் தொடா்ச்சியாக பகல் திருட்டில் ஈடுபட்ட திருடனை மடக்கி பிடித்த பொதுமக்கள்..!

ஆசிரியர் - Editor I
யாழ்.நகரை அண்டிய பகுதியில் தொடா்ச்சியாக பகல் திருட்டில் ஈடுபட்ட திருடனை மடக்கி பிடித்த பொதுமக்கள்..!

யாழ்ப்பாணம் மணல்தறை ஒழுங்கையில் அண்மை நாட்களில் தொடர்ச்சியாக இடம்பெற்ற திருட்டுத் தொடர்பில் அப்பகுதி மக்கள் மேற்கொண்ட தேடுதல் முயற்சியின் காரணமாக பல நாள் திருடன் நேற்றைய தினம் மடக்கிப் பிடிக்கப்பட்டான்.

மணல்தறை ஒழுங்கையில் அண்மையில் சில வீடுகளில் ரீவி , காஸ் சிலிண்டர் , கைத் தொலைபேசி என்பன பகல்வேளவயில் தொடா்ச்சியாக திருடங்பட்டு வந்தன. பகல்வேளையில் வீட்டார் பணிக்குச் செல்வதனை அவதானித்த சிலரே 

இவ்வாறு தொடர் களவு மற்றும் கொள்ளையில் ஈடுபட்டந்தனர். இதனால் அப்பகுதியில் வசிப்பவர்கள் உசார் நிலையிலேயே இருந்தனர். இந்நிலையில் நேற்றும் ஒரு வீட்டிற்குள் பகல் புகுந்து தனிமையில் இருந்த மூதாட்டியை ஏமாற்றி 

கைத் தொலைபேசியை களவாடிச் சென்றனர். இவ்வாறு களவாடிச் சென்றமை தொடர்பில் உடனடியாக தேடுதலில் ஈடுபட்டதோடு மறைகாணியின் உதவியுடன் திருடன் மடக்கிப் பிடிக்கப்பட்டான்.

இவ்வாறு மடக்கிப் பிடிக்கப்பட்ட திருடன் தனது திருட்டுக்களை ஒத்துக்கொண்ட நிலையில் பொருட்களை மீட்பதற்காக யாழ்ப்பாணம் பொலிசாரிடம் ஒப்படைக்கப்பட்டார். இதே நேரம் குறித்த திருடன் மீது ஏற்கனவே பல வழக்குகள் 

நிலுவையில் உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு