சீ.வி.கே.சிவஞானம் ஆளுநருக்கு எழுதிய கடிதம்..! இருப்பதையும் பிடுங்காதீா்கள்..

ஆசிரியர் - Editor I
சீ.வி.கே.சிவஞானம் ஆளுநருக்கு எழுதிய கடிதம்..! இருப்பதையும் பிடுங்காதீா்கள்..

சிறுபான்மை இனத்தவாின் உணா்வுகளையும், அதிகார பகிா்வு கோாிக்கையி னையும் புாிந்து கொண்ட ஒருவராக நானும், நாங்களும் நம்பியிருந்த அமைச்சா் ராஜித சேனாரத்ன, மாகாணசபைக்கு இருக்கும் அதிகாரத்தையும் பிடுங்கும் செயற்பாடு எதிா்க்கப்படாத ஒன்றா? 

என அவை தலைவா் சீ.வி.கே.சிவஞானம் கேள்வி எழுப்பியுள்ளாா். யாழ்ப்­பா­ணம் போதனா மருத்­து­வ­ம­னை­யின் பணிப்­பா­ளர் மருத்­துவ கலா­நிதி ரி.சத்­தி­ய­மூர்த்தி யாழ்ப்­பா­ணம் பிராந்­திய சுகா­தார சேவை­கள் பணிப்­பா­ள­ராக கட­மை­யாற்­று­ வார் என்­றும் இதற்­கான உத்­தி­யோ­க­பூர்வ அறி­வித்­தல் 

விரை­வில் அறி­விக்­கப்­ப­டும் என்­றும் அண்­மை­யில் யாழ்ப்­பா­ணம் வந்த சுகா­தார அமைச்­சர் ராஜித சேனா­ரத்ன தெரி­வித்­தி­ருந்­தார். இந்­தக் கருத்­துத் தொடர்­பில் வடக்கு மாகாண ஆளு­ந­ருக்கு வடக்கு மாகாண அவைத்­த­லை­வர் சி.வி.கே.சிவ­ ஞா­னம் கடி­த­மொன்றை அனுப்­பி­யுள்­ளார். 

அந்­தக் கடி­தத்­தி­லேயே அவர் மேற்­கண்­ட­வாறு குறிப்­பிட்­டுள்­ளார். அந்­தக் கடி­தத்­ தில், கடந்த இரு­பத்­தி­நான்­காம் திக­தி­யும் இரு­பத்­தைந்­தாம் திக­தி­யும் கூட்­ட­ மைப்­பின் தலை­வர் இரா.சம்­பந்­த­னால் முன்­வைக்­கப்­பட்ட இனப் பிரச்­சி­னைக்­ கான தீர்வு தொடர்­பான எந்­த­வி­த­மான சாத­க­மான 

சமிக்­கை­க­ளை­யும் தெரி­விக்­காத அரச தரப்­பின் ஓர் அங்­க­மா­கவே சுகா­தார அமைச்­ச­ரின் செயற்­பாட்டை கவ­லை­யு­டன் பார்ப்­பது தவிர்க்க முடி­யா­த­தா­கி­ விட்­டது என்று தெரி­வித்­துள்ள அவைத்­த­லை­வர், இந்­தப் பத­விக்கு மருத்­துவ கலா­ நிதி ரி.சத்­தி­ய­மூர்த்­தி­யின் தகு­தி­பற்றி எவ­ரும் கேள்வி எழுப்­பி­யது கிடை­யாது.

இது ஒரு தனி­ம­னி­தப்­பி­ரச்­சனை அல்ல. அவர் முழு­மை­யாக வட­மா­காண சுகா­  தார அமைச்­சுக்கு உள்­வாங்­கப்­ப­டு­வதை நாம் வர­வேற்­ப­தா­கவே கூறி­வ­ரு ­கின்­ றோம். மத்­திய அர­சின் கீழுள்ள ஓர் அதி­காரி மாகாண பொதுச் சேவைக்­கு­ரிய பணி­யில் அமர்த்­தப்­ப­டு­வது சட்­டப்­ப­டி­யும் 

அதி­கா­ரப்­ப­கிர்­வுத் தத்­த­வத்­துக்­கும் முர­ணா­னவை என்­ப­தையே நாம் சுட்­டக்­ காட்டி வரு­கின்­றோம். அத்­து­டன் சேவைக்­கா­லம் முழு­வ­தி­லும் நிரந்­த­ர­மாக போதனா மருத்­து­வ­ம­னை­யில் கட­மை­யாற்ற நிய­மிக்­கப்­பட்­ட­தாக கூறப்­ப­டும் ஒரு­வரை மாகாண பகி­ரங்­கச் சேவைக்கு நிய­ம­னம் 

செய்­வது அப்­பட்­ட­மான முரண்­பா­டும், தவ­றா­ன­து­மா­கும் என்­றும் குறிப்­பிட்­டுள்­ ளார். மேலும் தெரி­வித்­துள்ள அவர், மாகாண நிதி கையாள்கை தொடர்­பான எழுத்­தாணை அரச தலை­வ­ரால் நிய­மிக்­கப்­ப­டும் தலை­மைச் செய­ல­ருக்கே வழங்­கப்­ப­டு­கின்­றது. 

இவரே மாகாண சேவை­யைச் சேர்ந்த அதி­கா­ரி­க­ளுக்கு அதி­கா­ரக் கைய­ளிப்பு வழங்­கு­கின்­றார். இத்­து­டன் மாகாண சபை­கள் சட்­டத்­தின் பிரிவு 32(1) இன்­படி மாகாண பகி­ரங்க சேவை அலு­வ­லர்­க­ளின் நிய­ம­னம், இட­மாற்­றம், பதவி நீக்­கம், ஒழுக்­காற்று, கட்­டுப்­பாடு என்­பன மாகாண ஆளு­ந­ருக்கு 

உரித்­தாக்­கப்­பட்­டுள்­ளது. மாகாண பகி­ரங்க சேவை சாராத ஒரு­வர் மீது ஆளு­நர் எந்­த­வித கட்­டுப்­பாட்­டை­யும் கொண்­டி­ருக்க முடி­யாது. எனவே மாகாண பகி­ரங்க சேவை­யைச் சேராத ஒரு­வ­ருக்கு தலை­மைச் செய­லர் அல்­லது அவ­ரால் அதி­கார கைய­ளிப்பு வழங்­கப்­பட்ட எவ­ருமோ நிதிச் செயற்­பா­டு­க­ளுக்­கான 

அதி­கா­ரத்தை வழங்க முடி­யாது. அவ்­வாறு நிதி கையா­ளப்­ப­டு­தல் சட்ட விரோ­த­ மா­னது என்­பதை பதிவு செய்ய விரும்­பு­கின்­றோம். இந்த விட­யத்­தில் தங்­க­ளது நிலைப்­பாடு மாறா­மல் இருக்­கும் என்று நான் திட­மாக நம்­பு­கின்­றேன் -– என்­றார்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு