கொழும்பில் இன்று அதிகாலை நடந்த குரூர சம்பவம்..! ஒருவா் பலி, இன்னொருவா் படுகாயம்..

ஆசிரியர் - Editor I
கொழும்பில் இன்று அதிகாலை நடந்த குரூர சம்பவம்..! ஒருவா் பலி, இன்னொருவா் படுகாயம்..

கொழும்பு- கொஹிவல, ஜம்புகஸ்முல்ல பகுதியில் இன்று காலை இடம்பெற்ற துப்பாக்கி சூட்டு சம்பவத்தில் ஒருவா் சம்பவ இடத்திலேயே உயிாிழந்துள்ளதுடன், மற்றொருவா் படுகாயமடைந் துள்ளதாக பொலிஸாா் கூறியுள்ளனா். 

துப்பாக்கி சூட்டில் காயமடைந்த இருவரும் களுபோவில வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், ஒருவர் உயிரிழந்துள்ளார். மற்றைய நபர் சிகிச்சை பெற்று வருவதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

உடுஹமுல்லப் பிரதேசத்தைச் சேர்ந்த 39 வயதான ரணவக்க சுசில் ருவன் பெரேரா என்பவரே உயிரிழந்துள்ளார் எனத் தெரிவிக்கப்படுகிறது.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு