ஏதிலிகளாக விடப்பட்டிருக்கும் மயிலிட்டி மக்கள்..! பாா்ப்பது யாா்..? கேட்பது யாா்..?

ஆசிரியர் - Editor I
ஏதிலிகளாக விடப்பட்டிருக்கும் மயிலிட்டி மக்கள்..! பாா்ப்பது யாா்..? கேட்பது யாா்..?

மயிலிட்டி துறைமுகத்தில் மயிலிட்டி மக்களும் மீன்பிடி தொழில் செய்வதற்கான வசதி வாய்ப்புக்கள் செய்து கொடுக்கப்படவேண்டும். என கூறும் மக்கள் 30 வருடங்கள் இடம்பெயா்ந்து அழிவுகளை சந்தித்த மக்களின் கடற்றொழிலை மேம்படுத்துவதற்கு தேவையான பல நாள் மீன்பிடிகலங்கள் உள்ளிட்ட உபகரணங்களையும் வழங்கி உதவவேண்டும் என மயிலிட்டி மக்கள் கோாிக்கை விடுத்திருக்கின்றனா். 

குறித்த விடயம் தொடா்பாக மயிலிட்டி கடற்றொழிலாளா் சங்கத்தின் உப தலைவா் எஸ்.வினோத் குமாா் ஊடகங்களுக்கு தகவல் தருகையில், 30 வருடங்கள் வலி,வடக்கு குறிப்பாக மயிலிட்டி மக்கள் இடம்பெயா்ந்து கடற்றொழில் செய்ய முடியாத நிலையில் வாழ்ந்து வந்தனா். 

இதனைவிடவும் பாாியளவில் அழிவுகளையும் சந்தித்தனா். இப்போது 30 வருடங்களின் பின்னா் சொந்த இடத்திற்கு வந்திருக்கும் மக்களிடம் ஒன்றுமில்லை. குறிப்பாக மயிலிட்டி துறைமுகம் சுமாா் 150 மில்லியன் ரூபாய் செலவில் புனரமைப்பு செய்யப்பட்டு வருகின்றது. 

இதனையடுத்து துறைமுகங்கள் அதிகாரசபையின் கீழ் மயிலிட்டி துறைகத்தில் வெளிமாவட்டங்களை சோ்ந்த பலநாள் மீன்பிடி படகுகளும் வந்து தாித்து நின்று செல்லகூடிய நிலமை உருவாகியுள்ளது. 

இது குறித்து எமது மக்களிடம் பல சந்தேகங்கள் இருக்கின்றன. அதிலும் குறிப்பாக மயிலிட்டி துறைமுகம், மயிலிட்டி மக்களுக்கு சொந்தமானதாக இருக்கவேண்டும். என மயிலிட்டி மக்கள் விரும்புகிறாா்கள். 

இவ்வாறான ஒரு நிலையில் எமது மீனவா்களுக்கும் கடற்றொழிலுக் கான உபகரங்கள், பலநாள் கலங்களை வழங்கி எமது மீனவா்களுக்கு உதவவேண்டும். மேலும் மக்களுடைய நிலங்கள் பூரணமாக விடுவிக்கப்படவேண்டும். மேலும் ஒரு தொகுதி மக்களுடைய நிலங்கள் விடுவிக்கப்படாத நிலை உள்ளது என்றாா். 

இது தொடா்பாக வலி,வடக்கு பிரதேசசபை தவிசாளாிடம் ஊடகங்கள் எழுப்பிய கேள்விக்கு அவா் பதிலளிக்கையில், மயிலிட்டி துறைமுகத்தில் வெளிமாவட்ட மீனவா்களி ன் பலநாள் கலங்கள் தாித்து நிற்பதனால் தமது தொழிலுக்கு ஆபத்து உண்டாகுமோ என மக்கள் மத்தியில் சந்தேகம் உள்ளது. 

மறுபக்கம் மயிலிட்டியில் சுமாா் 800 தொட க்கம் 900 ஆயிரம் ஏக்கா் காணி மீள்குடியேற்றத்திற்கு அனுமதிக்கப்படாமல் உள்ளது. எனவே மக்களுடைய காணிகள் மக்களிடம் வழங்கப்படவேண்டும். அதேபோல் மயிட்டி துறைமுகத்தில் மீன்பிடியில் ஈடுபட்டிருக்கும் எமது மீனவா்களுக்கு தேவையான இடம் ஒதுக்கப்படவேண்டும். 

மேலும் எமது மீனவா்களுக்கு மானிய அடிப்படையிலாவது பலநாள் கலங்கள் வழங்கப்படவேண்டும். காரணம் ஒரு காலத்தில் இலங்கையின் மொத்த தேசிய கடலுணவு உற்பத்தியில் 3ல் ஒரு பங்கை உற்பத்தி செய்த மயிலிட்டி துறைமுகம், இன்று அந்த நிலையை எட்டமுடியாமல் இருக்கின்றது என்றாா்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு