யால தேசிய பூங்காவுக்குள் துப்பாக்கி சண்டை..! படுகாயமடைந்த நிலையில் 23 வயது இளைஞன் மீட்பு..

ஆசிரியர் - Editor I
யால தேசிய பூங்காவுக்குள் துப்பாக்கி சண்டை..! படுகாயமடைந்த நிலையில் 23 வயது இளைஞன் மீட்பு..

யால தேசிய பூங்காவுக்குள் வன ஜீவராசிகள் திணைக்களத்தினருக்கும் மாணிக்ககல் அகழ்வில் ஈடுபட்டிருந்தவா்களுக்குமிடையில் துப்பாக்கி சண்டை இடம்பெற்றுள்ளது. 

யால சரணாலயத்தின் மூன்றாம் இலக்க வலயத்தில் சந்தேகநபர்களால் மாணிக்கக்கல் அகழப்பட்டதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.

இதன்போது, வன ஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகளால் நடத்தப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் மாணிக்கக்கல் கடத்தல்காரர் ஒருவர் காயமடைந்துள்ளதுடன், 

மூன்று பேர் தப்பிச்சென்றுள்ளனர். கதிர்காமம் பகுதியை சேர்ந்த 23 வயதான இளைஞர் ஒருவரே துப்பாக்கிச்சூட்டில் காயமடைந்துள்ளார்.

துப்பாக்கிச்சூட்டில் காயமடைந்தவர் ஹம்பாந்தோட்டை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

மாணிக்கக்கல் அகழ்வு செய்யப்பட்ட இடத்திலிருந்து கையடக்க தொலைபேசிகள் மூன்றும் அகழ்விற்கு பயன்படுத்தப்பட்ட உபகரணங்களும் 

கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு