அதிபாின் அறைக்குள் புகுந்து பரீட்சை வினா தாள்களை திருடிய மாணவா்கள் இருவா் கைது..!

ஆசிரியர் - Editor I
அதிபாின் அறைக்குள் புகுந்து பரீட்சை வினா தாள்களை திருடிய மாணவா்கள் இருவா் கைது..!

அதிபாின் அறைக்குள் புகுந்து 2ம் தவணை பரீட்சை வினா தாள்களை திருடிய மாணவா்கள் இருவா் பொலிஸாாினால் கைது செய்யப்பட்டுள்ளனா். 

மஸ்கெலியா பெயார்லோன் தமிழ் வித்தியாலய மாணவர்கள் இருவரே பொலிஸாாினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவர்கள் இன்றைய தினம் கைது செய்யப்பட்டுள்ளனர் என  காவல் துறையினர் தெரிவித்தனர். பாடசாலையின் அதிபர் காவல் துறையினருக்கு அறிவித்தமையை 

தொடர்ந்தே குறித்த மாணவர்கள் காவல் துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். இரண்டாம் தவணைக்கான அனைத்து பாடங்களுக்குமான வினாத்தாள்கள் 

அதிபரின் அறையினுள் காணப்பட்ட ஆவண காப்பகத்தில் பாதுகாப்பாக பூட்டிடப்பட்டு வைக்கப்பட்டிருந்த நிலையில் மாணவர்களை 

ஆவணக்காப்பகத்தின் பூட்டினை உடைத்து வினாத்தாள்களை எடுத்துள்ளனர். கைது செய்யப்பட்ட மாணவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளை 

தொடர்ந்து ஒரு மாணவரின் வீட்டிலிருந்து 9 வினாத்தாள்கள் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

11 ஆம் வகுப்பினை சேர்ந்த குறித்த மாணவர்கள் இருவரும் தடுத்து வைக்கப்பட்டுள்ள நிலையில் காவல் துறையினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு