இரு இளைஞா்களுக்கு அரச வேலை..! சஜித் வாக்குறுதியளித்தாா்..

ஆசிரியர் - Editor I
இரு இளைஞா்களுக்கு அரச வேலை..! சஜித் வாக்குறுதியளித்தாா்..

முல்லைத்தீவு - சப்தகன்னிமார் ஆலய வளாகத்தில் அமைக்கப்பட்டிருந்த அறநெறிப் பாடசாலையினைத் திறந்து வைக்கும் நிகழ்வில் கலந்து கொண்ட அமைச்சர் சஜித் பிரேமதாச இருவரை அரச வேலைக்கு நியமிப்பதாக உறுதியளித்துச் சென்றார்.

குறித்த நிகழ்வில் அமைச்சர் சஜித் பிரேமதாசவினை அழகாக ஓவியம் வரைந்த ஒரு இளைஞன் மற்றும், குறித்த சப்த கன்னிமார் அறநெறிப் பாடசாலையில் கல்வி கற்பிக்கும் ஒரு ஆசிரியைக்குமே இவ்வாறு அரச வேலைவாய்பிற்கான 

நியமனம் வழங்குவதாக உறுதியளித்துள்ளார். மேலும் குறித்த அரச வேலைவாய்ப்பிற்கான நியமனங்களை நாளை மறுதினம் வெள்ளிக்கிழமை உரயவர்களுக்கு வழங்கப்படும் என்றும் அவர் உறுதியளித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு