சஜித்திடம் முல்லைத்தீவு மக்கள் முன்வைத்த கோாிக்கை..! டிசம்பருக்குள் செய்வேன். சஜித் வாக்குறுதி..

ஆசிரியர் - Editor I
சஜித்திடம் முல்லைத்தீவு மக்கள் முன்வைத்த கோாிக்கை..! டிசம்பருக்குள் செய்வேன். சஜித் வாக்குறுதி..

முல்லைத்தீவு - வட்டுவால் சப்தகன்னிமார் அறநெறிப் பாடசாலை திறப்பு விழாவில் கலந்துகொண்ட அமைச்சர் சஜித் பிரேமதாச, நந்திக்கடல் களப்பு எதிர்வரும் டிசம்பருக்குள் சீரமைப்பு வேலைகளை ஆரம்பிப்பதாக மீனவர்களுக்கு உறுதியளித்தார்.

நந்திக்கடல் களப்பானது ஆளங் குறவாகவும், சேறும் சகதியுமாக காணப்படுவதாகவும், எனவே நீர் விரைவாக வற்றுவதால் மீன்கள் அதிகளவில் இறந்துபோவது மற்றும் மீனவர்கள் வருடம் முழுவதும் மீன்பிடியில் ஈடுபடமுடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக 

அப்பகுதி மக்கள் அமைச்சர் சஜித் பிரேமதாசவிடம் தெரிவித்திருந்தனர். அந்தவகையில் தான் எதிர்வரும் டிசம்பருக்குள் நந்திக்கடல் களப்பு சீரமைப்பு வேலைகளை ஆரம்பித்து வைப்பதாக மீனவர்களிடம் சஜித் பிரேமதாச உறுதியளித்திருந்தார்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு