வெளிநாட்டிலிருந்த வந்தவருக்கு யாழ்ப்பாணத்தில் மறக்க முடியாத அனுபவத்தை கொடுத்த திருடா்கள்..!

ஆசிரியர் - Editor I
வெளிநாட்டிலிருந்த வந்தவருக்கு யாழ்ப்பாணத்தில் மறக்க முடியாத அனுபவத்தை கொடுத்த திருடா்கள்..!

ஐரோப்பிய நாடொன்றிலிருந்து யாழ்ப்பாணத்திற்கு வந்தவா் தங்கியிருந்த வீட்டுக்குள் புகுந்த கொள்ளையா்கள் பெருமளவு நகைகள், பணம் ஆகியவற்றை கொள்ளையிட்டு சென்றுள்ளனா். 

இந்த கொள்ளைச் சம்பவம் சண்டிலிப்பாய், டச்சு வீதியிலுள்ள வீடொன்றிலேயே இடம்பெற்றுள்ளது. ஐரோப்பிய நாடு ஒன்றிலிருந்து 

வந்தவர்களுடைய நகை, பணம் என்பனவே கொள்ளையிடப்பட்டுள்ளன. இதில் 30 பவுண் நகைகள், 600 யூரோ, மற்றும் 50 ஆயிரம் ரூபா பணம் என்பன கொள்ளையடிக்கப்பட்டுள்ளன.

வெளிநாட்டில் இருந்து வந்தவர்கள் தங்களது உறவினர்களுடைய வீட்டில் தங்கியிருந்துள்ளதாக தெரிய வருகிறது.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு