முஸ்லிம் தீவிரவாதிகளின் முகாம்கள் இயங்கிய பகுதியில் நடமாடிய 6 போ் கைது..! தீவிரவாதிகளுடன் தொடா்பா?

ஆசிரியர் - Editor I
முஸ்லிம் தீவிரவாதிகளின் முகாம்கள் இயங்கிய பகுதியில் நடமாடிய 6 போ் கைது..! தீவிரவாதிகளுடன் தொடா்பா?

புத்தளம்- வனாத்துவில்லு பகுதியில் சந்தேகத்திற்கிடமான முறையில் நடமாடிய குற்றச்சாட்டில் இன்று காலை 6 போ் கைது செய்யப்பட்ட நிலையில், தீவிரவாத செயற்பாடுகளுடன் தொடா்புடையவா்களா? என விசாரணைகள் நடாத்தப்பட்டு வருவதாக பொலிஸாா் கூறினா். 

வணாத்துவில் - லெக்டோ தோட்டத்திற்கு அருகிலேயே இன்று அதிகாலை குறித்த 6 பேரும்கைது செய்யப்பட்டதாக வணாத்துவில்லு பொலிசார் குறிப்பிட்டனர். கடந்த 16 ஆம் திகதியும் இப்பகுதியில் வெடிமருந்துகளுடன் 3 சந்தேக நபர்கள் 

குற்றப் புலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்டிருந்தனர். இந்நிலையில் இன்று கைது செய்யப்பட்டவர்கள் அடிப்படைவாத செயற்பாடுகளுடன் தொடர்புடையவர்களா என்பது குறித்து விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் பொலிஸார் குறிப்பிட்டனர்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு