துப்பாக்கி சூட்டிலிருந்து தப்பி ஓடிய ஆவா குழு ரவுடிகள் 3 பேருக்கு 14 நாட்கள் விளக்கமறியல்..

ஆசிரியர் - Editor I
துப்பாக்கி சூட்டிலிருந்து தப்பி ஓடிய ஆவா குழு ரவுடிகள் 3 பேருக்கு 14 நாட்கள் விளக்கமறியல்..

மானிப்பாய் பகுதியில் பொலிஸாாின் துப்பாக்கி சூட்டிலிருந்து தப்பி சென்ற நிலையில் கைது செய்யப்பட்ட 3 ஆவா குழு ரவுடிகளை 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்குமாறு மல்லாகம் நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

மானிப்பாய் இணுவில் வீதியில் 3 மோட்டார் சைக்கிள்களில் சென்ற 6 பேர் கொண்ட வாள்வெட்டுக் கும்பலை சுற்றுக்காவலில் ஈடுபட்டிருந்த காவற்துறையினர் வழிமறித்தனர். எனினும் அவர்கள் தப்பித்த வேளை, 

காவற்துறையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் இளைஞர் ஒருவர் உயிரிழந்தார்.இந்தச் சம்பவம் கடந்த சனிக்கிழமை இரவு 8.40 மணியளவில் இடம்பெற்றதுகொடிகாமம் கச்சாயைச் சேர்ந்த 23 வயதுடைய செல்வரத்தினம் கவிகஜன் என்ற இளைஞனே இவ்வாறு உயிரிழந்தார். 

ஆவா குழுவைச் சேர்ந்தவர் என்று தெரிவிக்கும் காவற்துறையினர் சம்பவ இடத்திலிருந்து வாள்களையும் மீட்டிருந்தனர்.இந்த நிலையில் மானிப்பாயில் ஒன்றுக்கு மேற்பட்ட வீடுகளில் தாக்குதல் நடத்துவதற்கு சென்ற கும்பலுக்கு பாதை காண்பிப்பதற்கு சென்றனர்

என்ற குற்றச்சாட்டில் இரண்டு இளைஞர்கள் நேற்று கைது செய்யப்பட்டனர். யாழ்ப்பாணம் பிராந்திய சிரேஸ்ட்ட காவற்துறை அத்தியட்சகரின் கீழ் இயங்கும் சிறப்புப் பொலிஸ் பிரிவினரே இவ்வாறு இரண்டு சந்தேகநபர்களையும் கைது செய்தனர்.

யாழ்ப்பாணம், நாவந்துறை அராலி வீதி வசந்தபுரத்தைச் சேர்ந்த இருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டனர். இந்த நிலையில் துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்த இளைஞனை மோட்டார் சைக்கிளில் ஏற்றிச் சென்று சூடு இடம்பெற்றதும் மோட்டார் சைக்கிளைக் 

கைவிட்டுத் தப்பிச் சென்ற இளைஞனின் பணப்பையை (பேர்ஸ்) சம்பவ இடத்தில் தவறிய நிலையில் அதனை காவற்துறையினர் மீட்டிருந்தனர்.மானிப்பாய் சுதுமலை தெற்கு ஐங்கரன் வீதியைச் சேர்ந்த 18 வயதுடைய சிவசுந்தரராஜா சானுசன் 

என்ற இளைஞனே இவ்வாறு தனது பணப்பையைத் தவறவிட்டுச் சென்றார். அவரது அடையாள அட்டையை வைத்து சந்தேகநபரைத் தேடி காவற்துறையினர் விசாரணைகளை முன்னெடுத்தனர். 

இந்த நிலையில் சந்தேகநபரை சிரேஸ்ட்ட சட்டத்தரணி மூலம் மானிப்பாய் காவற்துறை நிலையத்தில் நேற்று மாலை முற்படுத்தினார். அவரைக் கைது செய்த காவற்துறையினர் விசாரணைகளை முன்னெடுத்தனர். 

எனினும் ஏனைய சந்தேகநபர்கள் நால்வர் தொடர்பிலும் எந்தத் தகவலையும் சானுசன் தெரிவிக்கவில்லை என்று காவற்துறையினர் தெரிவித்தனர்.இந்த நிலையில் சந்தேகநபர்கள் மூவரும் மல்லாகம் நீதிமன்றில் நீதிவான் ஏ.ஏ.ஆனந்தராஜா முன்னலையில் 

நேற்று மாலை முற்படுத்தினர். மேலும் சந்தேகநபர்களைக் கைது செய்யவேண்டியுள்ளதாகப் காவற்துறையினர் மன்றுரைத்தனர். வழக்கை விசாரித்த நீதிவான், சந்தேகநபர்கள் மூவரையும் வரும் 5ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டார்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு