ஏறாவூாில் துப்பாக்கிகள், வாள்களுடன் வீடொன்றில் பதுங்கியிருந்த 3 போ் சுற்றிவளைத்து கைது..! தீவிரவாதிகள் என பதற்றம்.

ஆசிரியர் - Editor I
ஏறாவூாில் துப்பாக்கிகள், வாள்களுடன் வீடொன்றில் பதுங்கியிருந்த 3 போ் சுற்றிவளைத்து கைது..! தீவிரவாதிகள் என பதற்றம்.

அத்திப்பட்டி கிராமத்தில் சந்தேகத்திற்கிடமான 3 போ் ஆயுதங்களுடன் வீடொன்றில் தங்கியிருப்பதாக கிடைத்த தகவலி ஒன்றின் அடிப்படையில் குறித்த வீட்டை முற்றுகையிட்ட பொலிஸாா் ஆயுதங்களுடன் 3 பேரை கைது செய்துள்ளனா். 

ஏறாவூா் பொலிஸ் பிாிவிற்குட்பட்ட அத்திப்பட்டி கிராமத்தில் 3 போ் சந்தேகத்திற்கிடமான முறையில் நடந்து கொள்வதாக பிரதேச மக்கள் பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளனா். இதனையடுத்து பொலிஸாா், விசேட அதிரடிப்படை, இராணுவம்

குவிக்கப்பட்டு சந்தேகத்திற்குாிய வீடு முற்றுகையிடப்பட்டது. இதன்போது வீட்டிலிருந்து ரி 56 ரக துப்பாக்கி ஒன்றும், அதற்கான 16 தோட்டாக்கள் மற்றும் வாள் ஒன்றுடன் மூவரை் கைது செய்யப்பட்டுள்ளனர். 

 கைது செய்யப்பட்ட சந்தேகநபர் 25, 30 மற்றும் 34 வயதுடையவர்கள் என காவற்துறைனர் தெரிவித்துள்ளனர். சந்தேகநபர்கள் இன்று ஏறாவூர் நீதவான் நீதிமன்றில் முன்னிலை செய்யப்பட உள்ளதுடன், ஏறாவூர் காவற்துறையினர் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு