சட்டவிரோதமாக அவுஸ்ரேலியாவுக்குள் நுழைந்த 20 இலங்கையா்கள்..! உடனடியாக திருப்பி அனுப்பபடுகின்றனா்..

ஆசிரியர் - Editor I
சட்டவிரோதமாக அவுஸ்ரேலியாவுக்குள் நுழைந்த 20 இலங்கையா்கள்..! உடனடியாக திருப்பி அனுப்பபடுகின்றனா்..

சட்ட விரோதமாக அவுஸ்ரேலியாவுக்குள் நுழைய முயற்சித்த 20 இலங்கையா்கள் அவுஸ்ரேலிய கடற்படையினால் பிடிக்கப்பட்டு கிறிஸ்மஸ் தீவில் தங்கவைக்கப்பட்டுள்ளதுடன், 

அவா்களை உடனடியாக நாடு கடத்துவதற்கான பணிகளை அவுஸ்ரேலிய அரசாங்கம் மேற்கொண்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியிருக்கின்றது. 

கடந்த ஞாயிற்றுக்கிழமை குறித்த இலங்கையர்களை அவுஸ்திரேலிய எல்லைப் பகுதியில் வைத்து அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.

இவ்வாறு கைது செய்யப்பட்டவர்கள் மீளவும் இலங்கைக்கு நாடு கடத்தப்பட உள்ளதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

கடந்த மே மாதத்தின் பின்னர் படகு மூலம் சட்டவிரோதமாக அவுஸ்திரேலியாவிற்குள் பிரவேசிக்க முயற்சித்த மூன்றாவது சந்தர்ப்பம் 

இதுவெனத் தெரிவிக்கப்படுகிறது.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு