தாயுடன் நீராட சென்ற 4 வயது சிறுவன் விபத்தில் பலியான சோகம்..!

ஆசிரியர் - Editor I
தாயுடன் நீராட சென்ற 4 வயது சிறுவன் விபத்தில் பலியான சோகம்..!

தாயுடன் நீராடுவதற்காக சென்ற 4 வயது விபத்தில் சிக்கி உயிாிழந்த சம்பவம் தென்பகுதியில் பெரும் சோகத்தை உண்டாக்கியுள்ளது. 

யக்வெல பகுதியைச் சேர்ந்த 4 வயதுடைய ஹேரன் முதியன்சலாகே சத்தேவ் லொமென் குமார என்ற சிறுவனே இவ்வாறு உயிரிழந்துள்ளான்.

சம்பவ தினத்தன்று சிறுவன் குடும்பத்தினருடன் இணைந்து ஹேபொல ஓயாவில் நீராடச் சென்றுள்ளான். 

இதன்போது சிறுவனின் தாயார் சிறுவனை நீராட வைத்து பின்னர் வீதி ஓரத்தில் அமரவைத்துள்ளார். பின்னர் தாய் நீராட சென்ற சந்தர்ப்பத்திலேயே விபத்து இடம்பெற்றுள்ளது. 

கெப் ரக வாகனத்தில் மோதுண்டு படுகாயமடைந்த சிறுவன் பிபில வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்துள்தாக பொலிஸார் தெரிவித்தனர். 

விபத்து தொடர்பில் கெப் வாகனத்தின் சாரதியை கைது செய்துள்ளதுடன், மேலதிக விசாரணைகளையும் மேற்கொண்டு வருகின்றனர்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு