தமிழீழ விடுதலை புலிகளால் மறைத்துவைக்கப்பட்டிருந்த ஆயுத கிணறு கண்டு பிடிக்கப்பட்டது..! பெருமளவு வெடிபொருட்கள் மீட்பு.

ஆசிரியர் - Editor I
தமிழீழ விடுதலை புலிகளால் மறைத்துவைக்கப்பட்டிருந்த ஆயுத கிணறு கண்டு பிடிக்கப்பட்டது..! பெருமளவு வெடிபொருட்கள் மீட்பு.

புளியங்குளம் பகுதியில் உள்ள வீடொன்றின் கிணற்றுக்குள்ளிருந்து பெருமளவு ஆயுதங்களை இராணுவம் மீடடிருக்கின்றது. 

இராணுவத்தினருக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து புளியங்குளம் பெரியமடு விசேட அதிரடிப்படையினர் மற்றும் இராணுவத்தினர், 

பொலிஸார் இணைந்து ஆயுதங்களை மீட்கும் செயற்பாட்டை முன்னெடுத்தனர்.இதன்போது விடுதலைப்புலிகளால் மறைத்து வைக்கப்பட்டதாக சந்தேகிக்கப்படும் 

81எம்.எம்.குண்டுகள் 11, ரி.56 துப்பாக்கி , மிதி வெடி உட்பட சில ஆயுதங்கள் மீட்கப்பட்டுள்ளன. குறித்த பகுதியில் விடுதலைப்புலிகளின் ஆயப்பகுதி (வருவாய்த்துறை) 

செயற்பட்டு வந்த பிரதேசமாக அடையாளம் காணப்பட்டுள்ளது.இந்நிலையில் இன்று காலை 10 மணியளவில் ஆரம்பிக்கப்பட்ட இத் தேடுதலானது 

ஓமந்தையின் 563 ஆவது பிரிகேட்டின் கேணல் பண்டுக்க பெரேரா மற்றும் புளியங்குளம் விசேட அதிரடிப்படையின் பொறுப்பதிகாரி 

நிசந்த ஆகியோரின் தலைமையில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது

.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு