வாயை கொடுத்து புண்ணாக்காதீா்கள்..! ஹிஷ்புல்லாவுக்கு செருப்பால் அடித்த மனோகணேசன்..

ஆசிரியர் - Editor I
வாயை கொடுத்து புண்ணாக்காதீா்கள்..! ஹிஷ்புல்லாவுக்கு செருப்பால் அடித்த மனோகணேசன்..

சில விஷயங்களை பகிரங்கமாக பேசி இரகசியமாக செய்யவேண்டும். சில விடயங்களை இரகசியமாக பேசி பகிரங்கமாக செய்யவேண்டும். என கூறியிருக்கும் அமைச்சா் மனோ கணேசன், 

இல்லாத பொல்லாத பொய்களை எல்லாம் கூறி முஸ்லிம் சமூகத்தை சிக்கலில் மாட்டிவிட்டீா்கள் இப்போது இதுவேறயா என ஊடகங்களிடம் கேட்டேன் எனவும் அமைச்சா் மனோகணேசன் காட்டமாக கூறியுள்ளாா். 

முஸ்லிம் சமூகத்தின் வாக்குகள் இல்லாமல் எவராலும் ஜனாதிபதி ஆசனத்தை கற்பனை செய்துகூட பார்க்க முடியாது. என்று இங்கே மட்டக்களப்பில் ஹிஸ்புல்லா கூறுகிறாரே, இதுபற்றி நீங்கள் என்ன கூறுகிறீர்கள் என கேட்டதற்கே மனோ இவ்வாறு பதிலளித்துள்ளாா். 

தனது பதிலில் அவா் மேலும் கூறுகையில், 

சில விஷயங்களை பகிரங்கமாக பேசி ரகசியமாக செய்ய வேண்டும். சில விஷயங்களை ரகசியமாக பேசி பகிரங்கமாக செய்ய வேண்டும். அவை எவை என்ன என்பவற்றை சரியாக தீர்மானிப்பவனே பொறுப்புள்ள அரசியல்வாதி. 

இலங்கை போன்ற ஒரு பல்லின நாட்டில், சுய பிரபல்யத்திற்காக நாவடக்கமின்றி பேசுவோர் தமது இனத்தை ஆபத்தில் தள்ளுகிறார்கள்" என்று நான் பொதுப்படையாக பதில் சொன்னேன். வேறு என்னத்த சொல்ல...? 

ஏற்கனவே இல்லாத பொய்களை எல்லாம் சோடித்து சாமானிய முஸ்லிம் மக்களை, சந்தேக வலயத்தில் அவன்கள் வைத்திருக்கிறான்கள். இதில் இது வேறயா..!

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு