ஊடகவியலாளா்கள் படுகொலை, கடத்தல், தாக்குதல்..! உத்தரவிட்டது யாா்? விசாரணைகள் நிறைவு கட்டத்தில். சிக்கப்போவது யாா்?

ஆசிரியர் - Editor I
ஊடகவியலாளா்கள் படுகொலை, கடத்தல், தாக்குதல்..! உத்தரவிட்டது யாா்? விசாரணைகள் நிறைவு கட்டத்தில். சிக்கப்போவது யாா்?

ஊடகவியலாளா்கள் படுகொலை, கடத்தல், தாக்குதல் போன்றவற்றுக்கு உத்தரவு வழங்கியது யாா்? என்பது தொடா்பான விசாரணை தீா்க்கமான கட்டத்தை அடைந்துள்ளது. 

லசந்த விக்ரமதுங்க கொலை தவிர்ந்த ஏனைய சம்பவங்களுடன் நேரடியாக தொடர்புபட்டவர்கள் என கூறப்படும்  இராணுவ புலனாய்வாளர்கள் பலர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், 

அவர்களே லசந்த கொலையுடனும் தொடர்புபட்டுள்ளதாக சி.ஐ.டி. சில சான்றுகளை வெளிப்படுத்திக் கொண்டுள்ளது.

இந் நிலையில் அந்த புலனாய்வாளர்களுக்கு குறித்த  ஊடகவியலாளர்களுடன் எவ்வித தனிப்பட்ட பகைமையும் இல்லை 

என்பதை உறுதி செய்துள்ள சி.ஐ.டி. யாரின் தேவைக்காக அவர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டது என்பது குறித்து தீர்க்கமான விசாரணைகளில்  

ஈடுபட்டுள்ளதாக  நீதிமன்றங்களுக்கு அறிவித்துள்ளனர்.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு