சிறைச்சாலைக்கு சென்று பிள்ளையானை சந்தித்த அமைச்சா் மனோ..! காரணம் என்ன..?

ஆசிரியர் - Editor I
சிறைச்சாலைக்கு சென்று பிள்ளையானை சந்தித்த அமைச்சா் மனோ..! காரணம் என்ன..?

கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சா் பிள்ளையானை அமைச்சா் மனோகணேசன் இன்று சிறைச்சாலையில் சந்தித்து கலந்துரையாடியுள்ளாா். 

அவர் இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை மட்டக்களப்புச் சிறைச்சாலையில் சந்திரகாந்தனை சந்தித்து கலந்துரையாடியதாகக் கூறப்படுகிறது.

இந்த விடயம் தொடர்பாக கொழும்பு ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.அரசியல் நலன் விரும்பிகளும் நண்பர்களும் கேட்டுக்கொண்டதற்கிணங்கவே 

பிள்ளையானைச் சந்தித்ததாக அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்ததாக அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த சந்திப்பின்போது, பொதுவான நடப்பு அரசியல் சம்பந்தமாகவும் கடந்தகால எதிர்கால அரசியல் நடவடிக்கைகள் தொடர்பாக கலந்துரையாடியதாக 

மைச்சர் மனோ தெரிவித்ததாகவும் அந்த செய்தியில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.ஜோசப் பரராஜசிங்கம் கொலை வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டு 

கடந்த மூன்று வருடங்களாக கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் பிள்ளையான் எனப்படும் சந்திரகாந்தனை சிறைவாசம் அனுபவித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு