சம்பூா்- நல்லுாா் பகுதியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த வெடிபொருட்கள்..! பொலிஸாா் அதிரடி..

ஆசிரியர் - Editor I
சம்பூா்- நல்லுாா் பகுதியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த வெடிபொருட்கள்..! பொலிஸாா் அதிரடி..

திருகோணமலை- சம்பூா்- நல்லுாா் பகுதியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த வெடி பொருட்கள் இன்று காலை மீட்கப்பட்டிருக்கின்றது. 

நல்லூர் பகுதியில் பாழடைந்த காணிக்குள் வெடி பொருட்கள் மறைத்து வைக்கப்பட்டிருப்பதாக பொலிஸ் நிலையத்திற்கு இரகசிய தகவல் கிடைத்துள்ளது.

இதன் அடிப்படையில் அங்கு விரைந்த சம்பூர் பொலிஸார் மேற்கொண்ட சோதனையின் போது குறித்த வெடி பொருட்கள் மீட்கப்பட்டுள்ளன.

61 டெட்டனேட்டர்கள் மற்றும் டைனமைட் கூறுகளே கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

கைப்பற்றப்பட்ட வெடிபொருட்கள் பொலிஸ் நிலையத்தில் வைக்கப்பட்டுள்ளதாக மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வரும் சம்பூர் பொலிஸார் தெரிவித்துள்ளார்.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு